இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று – 19 பேர் பலி! மத்திய சுகாதாரத்துறை தகவல்!
இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று வேகமெடுத்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 13,086 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிகிக்சை பெறும் விகிதம், உயிரிழப்பு குறித்த புள்ளி விவரங்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு:
இந்தியாவில் சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. ஏற்கனவே ஜூன், ஜூலை மாதங்களில் கொரோனா நான்காம் அலை பரவும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்தனர். அதனால் தற்போது பரவி வரும் வைரஸ் தொற்று கொரோனா நான்காம் அலையாக இருக்குமோ என்று மக்கள் அச்சமடைந்துள்ளனர். மூன்றாம் அலைக்கு பிறகு மக்கள் பாதிப்புகளில் இருந்து வெளியேறி இயல்பு நிலைக்கு திரும்பி வரும் இந்த நேரத்தில் அடுத்த தாக்குதல் தொடங்கி விட்டது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நேரத்தில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
இதற்கு மத்தியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் சுமார் 13,086 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,35,15,547 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 19 பேர் சிகிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழப்பு எண்ணிக்கை 5,25,242 ஆக அதிகரித்துள்ளது. அதே போல தொற்றால் பாதிக்கப்பட்டு 1,14,475 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதனை தொடர்ந்து ஒரே நாளில் 12,456 பேர் தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடப்படுமா? அதிகரிக்கும் கொரோனா பரவல் எதிரொலி!
இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,28,91,933 ஆக உயர்ந்துள்ளது. மேலும் குணமடைந்தோர் விகிதம் 98.53% ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே நேரம் உயிரிழந்தோர் விகிதம் 1.21% ஆக குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்த கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் மட்டுமே நமக்கு பேராயுதமாக இருந்து வருகிறது. அதனால் அனைவரும் முறையாக 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. மேலும், இதுவரை நாடு முழுவதும் 1,98,09,87,178 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.