கேரளாவில் கனமழைக்கு இதுவரை 19 பேர் பலி, 8 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ அலர்ட் – வானிலை அறிக்கை!
மாநிலத்தில் கனமழை காரணமாக 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளனர். இதுபோல தாழ்வானப் பகுதிகளில் வசிப்போர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
ஆரஞ்சு அலர்ட்:
தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிர நிலை அடைந்து வருகிறது. மேலும் பல மாவட்டங்களில் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. மேலும் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சாலைகள் பல அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 1000-க்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து பல நாட்கள் இடைவிடாத மழைக்குப் பிறகு, கேரளாவின் தென் மாவட்டங்களில் இன்று மழை குறைந்து உள்ளது.
Post Office இல் சீனியர் சிட்டிசன்களுக்கான சூப்பர் சேமிப்பு திட்டங்கள் – முழு விபரம் இதோ!
அதே நேரத்தில் கேரளாவின் வடக்குப் பகுதியில் உள்ள 8 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கையை வெளியிட்டது. அதாவது கேரளாவின் இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு, இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையில் கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் செய்தியாளர்களிடம் கூறியது, முல்லைப் பெரியாறு நீர்த்தேக்கத்தின் மூன்று அணைகளும் இன்று காலை 11.30 மணிக்கு திறக்கப்பட்டு உள்ளது. மேலும் திருச்சூரில் உள்ள சாலக்குடி ஆற்றில் வியாழக்கிழமை இருந்த நீர் மட்டத்தை தொடர்ந்து தற்போது 7.27 மீட்டருக்கு மேல் நீர்மட்டம் உயர்ந்து உள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் கே ராஜன் தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
தொடர்ந்து பேசிய அவர், “இந்த மழை தற்போது தெற்கு கர்நாடகாவிற்கு நகரும் என்று ஐஎம்டி கணித்துள்ளது. இன்று கேரளாவின் வட மாவட்டங்களில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று இடுக்கி மாவட்டத்தில் அதிக மழை பெய்துள்ளது” என்று கே ராஜன் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் இடுக்கி மாவட்டத்திற்கு வந்துள்ள தேசிய பேரிடர் மீட்புப் படை முல்லைப் பெரியாறு அருகே தயார் நிலையில் இருப்பதாகவும் வருவாய்த்துறை அமைச்சர் கூறினார். இந்த கனமழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜூலை 31 முதல் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக 19 பேர் இறந்து உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.