ஈரோட்டில் 19 கால்நடை பராமரிப்பு உதவியாளர் காலிப்பணியிடங்கள் – ஏப்ரல் 26 முதல் நேர்காணல்!
ஈரோடு மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கான காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் இந்த வேலைக்கு விண்ணப்பித்தோருக்கு வருகிற 26ம் தேதி முதல், 29ம் தேதி வரை நான்கு நாட்கள் நேர்காணல் தேர்வு நடக்க உள்ளது.
கால்நடை பராமரிப்பு உதவி ஆய்வாளர்
கொரோனா வைரஸ் காரணமாக இரண்டு வருட காலமாக எந்த ஒரு துறையிலும் வேலை வாய்ப்பு அறிவிப்புகளையும், விண்ணப்பங்களையும் அறிவிக்கப்படாமல் இருந்தன. அதனால் அதிகமான மக்கள் இரண்டு வருடமாக மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து பின்னர் ஏமாற்றம் அடைந்தனர். அந்த வகையில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் அந்த அந்த மாவட்டங்களில் அரசு பணிகளுக்கான காலியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.
தமிழகத்தில் வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்கள் கவனத்திற்கு – ஏப்ரல் 22 முகாம் அறிவிப்பு!
அந்த வகையில் ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் சில மாவட்டங்களில் காலியிடங்களுக்கான அறிவிப்புகளை நிரப்புவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. காலியிடங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டதும் அதிகமான மக்கள் விண்ணப்பித்து வருகின்றன. அதுமட்டுமின்றி தோல்வி அடைந்த மாணவர்கள் தொடர்ந்து பட்டதாரிகளும் விண்ணப்பித்து வருகின்றனர் குறிப்பிடத்தக்கது.
ExamsDaily Mobile App Download
ஈரோடு மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கான நேர்காணல் வரும் 26ம் தேதி முத 29ம் தேதி வரை நடக்கிறது.ஈரோடு, ஸ்டேட் பாங்க் சாலையில் உள்ள கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில், தினமும் காலை, 9:30 மணி முதல் மாலை, 5:30 மணி வரை நேர்காணல் நடக்கிறது. தகுதி உள்ள விண்ணப்பதாரர்களுக்கு, நேர்காணலுக்கான அழைப்பாணை அனுப்பி உள்ளனர். அழைப்பாணை யில் குறிப்பிட்டுள்ள நாள், நேரத்தில் அழைப்பாணை கடிதத்துடன், அனைத்து அசல் சான்றுகள், முன்னுரிமை சான்றிதழ்களுடன் பங்கேற்க வேண்டும்.அழைப்பாணை கிடைக்காதவர்கள், உரிய ஆதாரத்துடன் ஈரோடு மண்டல இணை இயக்குனர் அலுவலகத்தை நேரில் அணுகி, நேர்காணலுக்கான அழைப்பாணை நகல் பெறலாம்.