தமிழகத்திற்கு ரூ.183.67 கோடி வருவாய் பற்றாக்குறை நிதி விடுவிப்பு – மத்திய அரசு அறிக்கை!
மத்திய அரசு சார்பில் தமிழகம் உள்ளிட்ட 17 மாநிலங்களுக்கு 4வது தவணையாக ரூ.9,871 கோடி வருவாய் பற்றாக்குறை நிதியை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருவாய்ப் பற்றாக்குறை நிதி:
நாடு முழுவதும் பல மாநிலங்களில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு உயிர் சேதாரங்கள் ஏற்பட்டுள்ளன. அதுமட்டுமில்லாமல் பொருளாதார ரீதியாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் ஆண்டுதோறும் மத்திய மாநில அரசுகளுக்கிடையே வருவாயை பகிர்ந்து கொள்வது தொடர்பாக பரிந்துரைகளை நிதிக் குழு மத்திய அரசிடம் வழங்கும்.
தமிழகத்தில் நீட் தேர்வு குறித்த ஆய்வுப்பணிகள் 90% முடிவு – சிறப்பு குழு தகவல்!
பல மாநிலங்களில் வருகிற வருவாயை விட செலவினம் அதிகமாக காணப்படும். அந்த மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை நிதி வழங்கப்பட வேண்டும் என நிதிக்குழு பரிந்துரைக்கும். அதன் மூலம் வழங்கப்படும் நிதி மூலமாக மாநில அரசுகள் நிதி பற்றாக்குறையை சமாளிக்கும். இந்நிலையில் 15வது நிதிக்குழு மாநிலங்களுக்கு பரிந்துரை அறிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன்படி தமிழகம் ஆந்திரா, அசாம், ஹரியானா, இமாச்சல் பிரதேசம், கர்நாடகா, கேரளா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தரகண்ட், மேற்குவங்கம் ஆகிய 17 மாநிலங்களுக்கு ரூ.9,871 கோடியை வருவாய்ப் பற்றாக்குறை நிதியாக மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில் தமிழகத்திற்கு 4வது தவணையாக ரூ.183.67 கோடியை மத்திய அரசு விடுத்துள்ளது. மொத்தமாக 12 தவணைகளில் மொத்த தொகையும் விடுவிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.