மாருதி சுசூகியில் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு – ரூ.18,000 கோடி முதலீடு !
இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான மாருதி சுசூகி ஏற்றுமதி வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் நோக்கில் புதிதாக ஒரு தொழிற்சாலை உருவாக்கம் செய்ய 18,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. இதன் மூலம் பல ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்புள்ளது.
மாருதி சுசூகி நிறுவனம்:
இந்தியாவில் வளர்ந்து வரும் துறைகளில் ஆட்டோமொபைல் துறை கடுமையான போட்டிகளைச் சந்தித்து வருகிறது. இந்த நேரத்தில் வர்த்தகத்தை தொடர்ந்து தக்கவைத்து கொள்வது மிகவும் சவாலான ஒன்றாக உள்ளது. இந்நிலையில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய பல நடவடிக்கைகளை மாருதி சுசூகி நிறுவனம் எடுத்து வருகிறது. இந்நிலையில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வரும் மாருதி சுசூகி நிறுவனம் ஓரே இடத்தில் மிகப்பெரிய உற்பத்தி தளத்தை உருவாக்க ரூ.18 ஆயிரம் கோடி தொகையை முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் அனைத்து கட்சி குழு நாளை டெல்லி பயணம் – மேகதூத அணை விவகாரம் !!
இந்த தொழிற்சாலை ஹரியானா மாநிலத்தில் அமைக்கப்படும் எனவும் இந்திய தொழிற்சாலையில் வருடத்திற்கு சுமார் 10 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடியும் என இந்த நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி. பார்கவா தெரிவித்துள்ளார். மேலும் ஹரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து வர்த்தகம் மற்றும் தொழிற்சாலைகளில் 75சதவிகிதம் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என சட்டம் உள்ளதால் மாருதி சுசூகி சில தயக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
இந்த திட்டம் பல ஆண்டுகளுக்கு முன்னதாக தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த பணிகள் முடங்கியுள்ளன. தற்போது கொரோனா பரவல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மீண்டும் திட்டம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 75 சதவீதம் வேலைவாய்ப்பு உள்ளூர் மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற கட்டுப்படு குறித்து மாநில அரசுடன் ஆலோசனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.