காகித பொருட்களுக்கு 18% GST வரி உயர்வு – அச்சுத்துறையினர் அதிர்ச்சி!

0
காகித பொருட்களுக்கு 18% GST வரி உயர்வு - அச்சுத்துறையினர் அதிர்ச்சி!
காகித பொருட்களுக்கு 18% GST வரி உயர்வு - அச்சுத்துறையினர் அதிர்ச்சி!
காகித பொருட்களுக்கு 18% GST வரி உயர்வு – அச்சுத்துறையினர் அதிர்ச்சி!

காகிதத்தால் செய்ய கூடிய பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியானது 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அச்சுத்துறையில் சிறு குறு வணிக தொழில்கள் பெரிதும் பாதிக்கப்படும். அதனால் ஜிஎஸ்டி வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி:

தமிழகத்தில் கடந்த மே, ஜூன் மாதங்களில் விதிக்கப்பட்ட ஊரங்கால் கடைகள், வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டது. இதனால் அனைத்து வகையான தொழில்களும் தொடர் பொருளாதார சரிவை சந்தித்தது. ஏராளமான மக்கள் வேலையிழந்து தவித்து வந்தனர். இத்தகைய சூழலில் அரசு நோய் தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டியது. நோய் தடுப்பு பணியின் ஒரு பகுதியாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. எதிர்பார்த்த அளவு கொரோனா தாக்கம் குறைந்ததும் அரசு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது.

5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி – பணிகள் தொடக்கம்!

தளர்வுகள் அறிவிக்கப்பட்டவுடன் அரசின் நோய் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கடைகள் திறக்கப்பட்டு வழக்கம் போல வியாபாரம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இருப்பினும் 100% தளர்வுகள் அளிக்கப்படவில்லை. மேலும் கட்டுப்பாடுகளும் தொடர்வதால் ஊரடங்கால் ஏற்ப்பட்ட பொருளாதார சரிவில் இருந்து வியாபாரிகளால் மீண்டு வர முடியவில்லை. இந்த நிலையில் காகித பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. காகித பொருட்களுக்கு ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 10 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

இதனால் அச்சுத்துறையில் உள்ள சிறு, குறு வணிக நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்படும். அச்சு புத்தகங்களுக்கு ஜி.எஸ்.டி., கிடையாது என்றாலும், காகிதங்களுக்கான ஜி,எஸ்.டி., உயர்த்தப்பட்டுள்ளதால், பாட புத்தங்கள் உட்பட அனைத்து புத்தகங்களின் விலை அதிகரிக்கும். கொரோனா தொற்றால் பள்ளிகள் இயங்காததால் ஏற்கனவே அச்சுத்துறை பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் இதனை கருத்தில் கொண்டு காகித பொருட்களுக்கான ஜி.எஸ்.டி உயர்வை, அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அச்சுத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!