மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத DA நிலுவைத்தொகை – 7வது ஊதியக்குழு அறிக்கை!
2020 ஆம் ஆண்டில் மத்திய அரசால் நிறுத்தி வைக்கப்பட்ட 18 மாத டிஏவுக்கான நிலுவைத் தொகை விரைவில் பெறப்படலாம் என்று அறிக்கைகள் வெளியாகியுள்ளது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
நிலுவை தொகை:
ஜூலை 1, 2021 அன்று DA மீதான முடக்கம் நீக்கப்பட்ட பிறகு DA மற்றும் DR மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர், ஓய்வூதியத் துறை ஓய்வூதியதாரர்களின் நலன் மற்றும் அவர்களின் குறைகளை பல நிலைகளில் தீர்த்து வருகிறது. ஆனால் டிஏ மற்றும் டிஆர் ஆகியவற்றை பற்றிய பேச்சுவார்த்தைகள் இல்லை என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி கடந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
சென்னையில் இன்று அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!
இது அக்டோபரில் 3 சதவீதம் அதிகரித்து 31 சதவீதமாக இருந்தது. அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மேலும் 3 சதவீதம் உயர்த்தப்பட்டது. தற்போது 34 சதவீதமாக உள்ளது. 2020 ஆம் ஆண்டில் மத்திய அரசால் முடக்கப்பட்ட 18 மாத டிஏவுக்கான நிலுவைத் தொகை விரைவில் பெறப்படலாம் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றது. முடக்கப்பட்ட DAக்கான பலன்கள் கடந்த ஆண்டு வழங்கப்பட்டன. ஆனால் அதன் பிறகு நிலுவைத் தொகைக்கான தேவை அதிகரித்து வருகிறது. தொற்றுநோய்க்கு மத்தியில் முடக்கப்பட்ட டிஏ உயர்வின் மூன்று தவணைகள் பெறப்படாது. இந்த விவகாரத்தில் அரசு ஆலோசித்து வருவதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனவரி 2020 மற்றும் ஜூன் 2021 க்கு இடையில் நிறுத்தப்பட்ட DA க்கான நிலுவைத் தொகை வழங்கப்படாது என்று அரசு முன்னரே தெரிவித்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
கோவிட்-19 காரணமாக முடக்கப்பட்டிருந்த காலத்திற்கான அகவிலை நிவாரண (டிஆர்) பகுதியை விடுவிக்க ஓய்வூதியதாரர்களின் கோரிக்கையை நிதி அமைச்சகம் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மொத்த டிஆர் மற்றும் டிஏ நிலுவைத் தொகை தோராயமாக ரூ.34,000 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஓய்வூதிய விதிகளை மறுஆய்வு செய்வதற்காக தன்னார்வ நிறுவனங்களுக்கான நிலைக்குழுவின் 32வது கூட்டத்தில் நிதியமைச்சகத்தின் செலவினத் துறையின் பிரதிநிதி, டிஏ மற்றும் டிஆர் நிலுவைத் தொகை வழங்கப்படாது என்று கூறியதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.