மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத டிஏ நிலுவைத்தொகை எப்போது? அரசு தரப்பு விளக்கம்!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத டிஏ நிலுவைத்தொகை எப்போது? அரசு தரப்பு விளக்கம்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத டிஏ நிலுவைத்தொகை எப்போது? அரசு தரப்பு விளக்கம்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத டிஏ நிலுவைத்தொகை எப்போது? அரசு தரப்பு விளக்கம்!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில் மத்திய அரசு 2020ம் ஆண்டு தொடக்கம் முதல் 18 மாதங்கள் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைத்தது. தற்போது வரை அவை வழங்கப்படவில்லை.

DA நிலுவைத்தொகை:

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 2020 ஆம் ஆண்டில் ஜனவரி 1 முதல் நிறுத்தப்பட்டது. கொரோனா தொற்று காலத்தில் அரசு நிதி நெருக்கடியை சமாளிக்க இந்த முறையை கையாண்டது. 2020 ஆம் ஆண்டில் அரசாங்கத்தால் முடக்கப்பட்ட 18 மாத டிஏவுக்கான நிலுவைத் தொகை விரைவில் பெறப்படலாம் என்று அறிக்கைகள் கூறுகின்றன. முடக்கப்பட்ட DA நன்மைகள் கடந்த ஆண்டு வழங்கப்பட்டன. ஆனால் முடக்கப்பட்ட டிஏ உயர்வின் மூன்று தவணைகள் பெறப்படாது என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த விவகாரத்தில் அரசு ஆலோசித்து வருவதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

EPFO அக்கவுண்ட் வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – புகைப்படம் அப்லோடு செய்வது எப்படி?

ஜனவரி 2020 மற்றும் ஜூன் 2021 வரை 18 மாதங்கள் நிறுத்தப்பட்ட DA க்கான நிலுவைத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நிலுவைத் தொகையை வழங்குவது குறித்து எந்த விவாதமும் இல்லை என மத்திய அரசு தற்போது தெளிவாக கூறியுள்ளது. இதேபோல், ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணமும் முடக்கப்பட்டது. அவற்றை வழங்க அவர்கள் வைத்த கோரிக்கையை நிதி அமைச்சகம் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மொத்த டிஆர் மற்றும் டிஏ நிலுவைத் தொகை தோராயமாக ரூ.34,000 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

எனவே ஓய்வூதிய விதிகளை மறுஆய்வு செய்வதற்காக தன்னார்வ நிறுவனங்களுக்கான நிலைக்குழுவின் 32வது கூட்டம் நடத்தப்பட்டது. அதில் டிஏ மற்றும் டிஆர் நிலுவைத் தொகை வழங்கப்பட மாட்டாது என்று கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. ஜூலை 1, 2021 முதல் DA மற்றும் DR மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, மத்திய ஊழியர்களுக்கான அகவிலைப்படி கடந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இது அக்டோபரில் 3 சதவீதம் அதிகரித்து 31 சதவீதமாக இருந்தது, அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மேலும் 3 சதவீதம் உயர்த்தப்பட்டது. இது தற்போது 34 சதவீதமாக உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!