மத்திய அரசு ஊழியர்களின் 18 மாத அகவிலைப்படி நிலுவைத்தொகை – அரசின் திடீர் முடிவு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு முன்னதாக செலுத்தப்படாமல் உள்ள 18 மாதங்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று அவர்கள் அதிக அளவில் எதிர்பார்த்து வந்த நிலையில், தற்போது அதற்கான வாய்ப்புகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலுவைதொகை:
மத்திய அரசின் ஊழியர்களுக்கு கடந்த 2020 ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் செலுத்தப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வானது அப்போதைய கொரோனா கால பேரிடர் சமயத்தில் நிறுத்தபட்டிருந்தது. அதன்பிறகு கடந்த ஜூன் மாதம் வரை நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால் DA உயர்வு அரசு ஊழியர்களுக்கு செலுத்தப்படவில்லை. இதனால் அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் கொரோனா கால நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இந்த பணம் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Online வழியில் பட்டப்படிப்பு பயில்வோருக்கு சூப்பர் அறிவிப்பு – UGC வெளியீடு!
இதனால் 2020 ஜனவரி முதல் 2021 ஜனவரி வரையிலான 3 தவணைகளுக்கு மத்திய அரசு ஊழியர்களின் DA நிறுத்தி வைக்கப்பட்டது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (டிஏ உயர்வு) 2022 பட்ஜெட் தாக்கலில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல லட்சக்கணக்கான ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வினை கடந்த 2020 ஜனவரி முதல் 2021 ஜூன் வரை நிலுவையில் வைத்தது. அகவிலைப்படி உயர்வுடன் நிலுவை தொகை அளிப்பது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.
பள்ளிகளில் 100% மாணவர்களின் வருகை பதிவுக்கு பின் மதிய உணவு திட்டம் துவக்கம் – அரசு தகவல்!
ஆனால் 18 மாதங்களாக நிலுவையில் உள்ள அகவிலைப்படி தற்போது செலுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. வர இருக்கும் ஹோலி பண்டிகையை முன்னிட்டு தற்போதைய தவணைக்கான DA உயர்வு அறிவிக்கப்பட உள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிக்கையில், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால் ஊழியர்களின் அகவிலைப்படி நிறுத்தப்பட்டதாகவும், இதன் காரணமாக ஏழை, எளியோருக்கு அந்த பணத்தில் அரசு உதவி செய்யும் என்றும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.