மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் 18 மாத DA நிலுவைத்தொகை? முழு விவரம் இதோ!
தற்போது 7வது ஊதியக்குழுவின் கீழ் ஊதியம் பெறும் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத DA நிலுவைத்தொகையை வழங்குவது குறித்து அரசாங்கம் முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
DA நிலுவைத்தொகை
கொரோனா பேரலைத்தொற்று நிமித்தமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு கிட்டத்தட்ட 3 தவணைகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அகவிலைப்படி (DA) தொகை தற்போது 34% ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை இன்னும் அரசு ஊழியர்களின் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. இப்போது 18 மாத டிஏ நிலுவைத்தொகைக்காக காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள் விரைவில் நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் ஜூலை மாத சம்பளத்தில் அரசு ஊழியர்கள் உயர்த்தப்பட்ட DA நிலுவைத் தொகையை பெறலாம் என்று தெரிகிறது.
மதுரையில் நாளை (ஜூன் 2) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
ஆனால், ஜனவரி 2020 முதல் ஜூன் 2021க்கு இடைப்பட்ட காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் DA தொகைகளை வழங்குவது குறித்து எந்த பரிசீலனையும் அரசு மேற்கொள்ளவில்லை. இருப்பினும் ஜூலை மாதத்தில் லட்சக்கணக்கான ஊழியர்களின் டிஏவை உயர்த்துவதன் மூலம், அரசாங்கம் ஊழியர்களுக்கு ஒரு சிறந்த செய்தியை வழங்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது ஏஐசிபிஐ குறியீட்டின்படி, இம்முறை அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத டிஏவை அதிகரிக்கலாம் என்று தெரிகிறது. அதன் பிறகு ஊழியர்களின் டிஏ 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயரும்.
Exams Daily Mobile App Download
இதன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.56,900 என்றால் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி (DA) தொகை மூலம் ரூ.19,346 வரை ஊதிய உயர்வு கிடைக்கும். இதே நேரத்தில் 2022 ஜூலை மாத தவணைக்கான அகவிலைப்படி தொகை மீண்டும் 4% உயர்வை காணலாம் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதன் படி மத்திய அரசு ஊழியர்களுக்கு 38 சதவிகிதம் என்ற விகிதத்தில் டிஏ அதிகரிக்கப்பட்டால் ரூ 56,900 என்ற அடிப்படை சம்பளத்தின் கீழ் மொத்த DA ரூ.21,622 வரை அதிகரிக்கும். அதே நேரத்தில் ஊழியர்களின் சம்பளம் ஆண்டுக்கு ரூ.27,312 வரை அதிகரிக்கும்.