தமிழகத்திற்கு ஜூன் 15 முதல் 18.36 லட்சம் தடுப்பூசிகள் வழங்கல் – மத்திய அரசு அறிவிப்பு!!
தமிழகத்திற்கு ஜூன் 15 முதல் 30 ஆம் தேதி வரையிலான வரும் நாட்களில் 18.36 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் 7.24 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. நாள் தோறும் உயிரிழப்புகள் 3 ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கிறது. நோய் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து மேற்கொள்கிறது. அரசு மக்களுக்கு நோயின் தீவிரம் குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. முகக்கவசம் அணிதல், கிருமி நாசினிகள் பயன்படுத்துதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.
TN Job “FB Group” Join Now
மேலும் கொரோனா தொற்றிலிருந்து மக்களை காக்க தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநில அரசுகளும் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தி வருகிறது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி 18 வயது முதல் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. தடுப்பூசிகள் பற்றாக்குறைவாக இருப்பதால் தடுப்பூசி செலுத்தும் பணி தாமதமாகிறது. இதனால் தமிழக அரசு மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது.
தேசிய அளவில் குறைந்தபட்ச ஊதிய பரிந்துரை – நிபுணர் குழு அமைப்பு!
தமிழ்நாட்டிற்கு ஜூன் 15 முதல் 30 ஆம் தேதி வரையிலான வரும் நாட்களில் 18.36 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஜூன் 2 ஆம் தேதி வரையில் ஒரு கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டு உள்ளதாகவும், தற்போது 7.24 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பிற மாநிலத்திலும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு எதுவும் இல்லை என மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளது.