ESICல் 2022 நவம்பர் மாதம் 18.86 லட்சம் பேர் புதிதாக இணைப்பு – தேசிய புள்ளியியல் அலுவலகம் தகவல்!
நாடு முழுவதும் உள்ள தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் கடந்த ஆண்டு நிலவரப்படி புதிதாக இணைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விவரங்கள் குறித்த அறிக்கையை தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது. கடந்த வருடங்களை காட்டிலும் இணைப்பு எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ESIC இணைப்பு:
ESI என்ற தொழிலாளர் மாநில காப்பீடு திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் நிறுவனம் ஆகிய இரண்டு தரப்புகளில் இருந்து பங்குகள் அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் சேர்ந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் அவசரகால செலவுகள், மருத்துவ தேவைகள், ஊழியரை சார்ந்து வாழும் நபரின் மருத்துவ செலவுகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஊழியர்களின் கர்ப்பகாலத்தில் போன்ற பல்வேறு சிறப்பு வசதிகள் அளிக்கப்படுகின்றது.
Follow our Instagram for more Latest Updates
ஆண்டுதோறும் தேசிய புள்ளியியல் அலுவலகம் புதிதாக தொழிலாளர் மாநில காப்பீடு திட்டத்தில் சேரும் நிறுவனம் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை குறித்த அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இதற்காக முன்னதாக கடந்த 2019-20ஆம் ஆண்டில் 1.51 கோடி பேர் இணைந்துள்ளனர். இதேபோல், 2018-19ஆம் ஆண்டில் 1.49 கோடி பேர் இணைந்துள்ளனர். 2020-21 நிதியாண்டில் மொத்தம் 1.15 கோடி பேர் ESIC திட்டத்தில் இணைந்துள்ளனர்.
இந்நிலையில், 2022 நவம்பர் மாத நிலவரத்திற்கான அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 18.86 லட்சம் ஊழியர்கள் மற்றும் 21,953 நிறுவனங்களும் புதிதாக இணைந்துள்ளது. இதில், 63 பேர் திருநங்கைகள் என்றும், 3.51லட்சம் பேர் பெண்கள் என்றும், 8.78 லட்சம் நபர்கள் 18 முதல் 25 வயதிற்கு உட்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.