ஒரே நாளில் 178 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு – பயிற்சி பள்ளி மூடல்!
மீண்டும் உருவெடுத்து வரும் கொரோனா பாதிப்பு தற்போது புதுவை மாவட்ட காவலர் பயிற்சி பள்ளியில் தங்கியிருந்த காவலர்கள் பலருக்கும் உறுதியாகியுள்ளது. மேலும், இன்றைய நாளில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை குறித்த விவரங்களும் தற்போது வெளியாகியுள்ளது.
கொரோனா பாதிப்பு:
புதுச்சேரி மாவட்ட கோரிமேட்டில் காவலர் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட 390 ஆண் மற்றும் பெண் காவலர்கள் தங்க வைக்கப்பட்டு, தினமும் அவர்களுக்கு பல்வேறு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில் கடந்த ஜூன் 16-ந் தேதி அன்று ஒரு காவலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார். இதனை தொடர்ந்து அப்பயிற்சி பள்ளியில் இருக்கும் காவலர்கள் ஒவ்வொருவராய் தினமும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் நேற்றைய தினம் மட்டுமே 29 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. உடனே பாதிக்கப்பட்ட அனைத்து காவலர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். இதை தொடர்ந்து, கோரிமேடு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர்கள் காவலர் பயிற்சி பள்ளியில் முகாமிட்டு, அப்பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வரும் மற்ற போலீசார் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்தனர். அந்த பரிசோதனையிலும் 84 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
JEE தேர்வர்களுக்கான முடிவுகள் எப்போது? அதிகாரப்பூர்வ தகவல் வெளியீடு
இதை குறித்து சுகாதார துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 24 மணி நேரத்திற்குள் 1,820 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 178 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. மேலும், இன்று புதுச்சேரியை சேர்ந்த 152 பெரும், காரைக்காலை சேர்ந்த 15 பேர் என மொத்தமாக 119 பேர் குணமடைந்துள்ளார்கள். அதனால் தற்போது மருத்துவமனைகளில் 4 பேர், வீடுகளில் 827 பேர் என 831 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். இதையடுத்து, அந்த காவலர்கள் ஒரு வாரம் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும், இதற்காக காவலர் பயிற்சி பள்ளிக்கு 1 வாரம் விடுமுறை விடுமாறும் காவல்துறைக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.