இந்தியாவில் 173 ரயில்கள் ரத்து? ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!
இந்திய ரயில்வே வாரியம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று 173 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் முன்பதிவு செய்திருந்த பயணிகள் இதனை அறிந்து கொண்டு பயணிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே நிர்வாகம்:
இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சேவையில் பேருந்து கட்டணங்களை விட குறைவாக இருப்பதால் மக்கள் அதிக அளவில் இந்த ரயில் சேவையை தேர்ந்தெடுக்கின்றனர். இதனை தொடர்ந்து ரயில்வே நிர்வாகமும் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து வருகிறது. அதாவது, மக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்றவாறு சிறப்பு ரயில் சேவைகளும் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் விரைவான போக்குவரத்தை விரும்பும் மக்களுக்கு இந்த சேவை ஏற்றதாக இருக்கிறது.
நாட்டில் இன்று ஒரே நாளில் 6,809 பேருக்கு கொரோனா உறுதி – அதிர்ச்சி ரிப்போர்ட்!
இதை தவிர முன்பதிவு வசதிகள், இருக்கை வசதிகள் போன்ற சேவைகளை மக்கள் வசதிக்கேற்ப ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக ரயில் பயணம் மேற்கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்திய ரயில்வே நிர்வாகம் தற்போது பாதியளவு ரயில் சேவைகளை மின் ரயில் சேவையாக மாற்றி வருகிறது. இதன் காரணமாக அனைத்து பயணிகள் ரயில்களும் எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனால் ரயில் கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் ரயில்வே நிர்வாகம் ரயில் தடங்களில் குறிப்பிட்ட கால இடைவெளியில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது இந்தியாவில் பல மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்யும் விதமாக பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்று 173 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் 37 ரயில்களின் தொடக்க ஸ்டேசன்கள் மாற்றப்பட்டுள்ளன. மற்றும் 41 ரயில்கள் கடைசி ஸ்டேன்களின் இடம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்