ஜன.15 முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு 16 நாட்கள் விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!
மத்திய பிரதேசத்தில் கொரோனா பரவல் காரணமாக நாளை முதல் ஜனவரி 31 வரை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
விடுமுறை:
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. மற்ற நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் ஓமிக்ரான் மற்றும் கொரோனா பாதிப்புகள் வேகமெடுத்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 3000 த்துக்கும் மேற்பட்டோர்க்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸ் டெல்டாவை போல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 18 வயது மேற்பட்டோருக்கு செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி தற்போது 15 முதல் அனைவரும் செலுத்தப்பட்டு வருகிறது.
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லையாக அறிமுகமாகும் நடிகை தேஜஸ்வினி – ஷாக் ப்ரோமோ!
அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த பல மாநிலங்கள் ஊரடங்கையும், கட்டுப்பாடுகளையும் விதித்து வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது. மூன்றாம் அலை குழந்தைகளை அதிகம் பாதிப்புக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்த நிலையில் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஜனவரி 31ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தல்!
மற்ற மாநிலங்களை தொடர்ந்து தற்போது மத்திய பிரதேசத்தில் ஓமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக நாளை முதல் ஜனவரி 31 வரை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கொரோனா தாக்கத்தால் பல நாட்கள் விடுமுறை விடப்பட்டு அண்மையில் தான் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் கல்வி நிலை குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது.