TET தேர்வின் தகுதி மதிப்பெண்களில் “இவர்களுக்கு” 15% சலுகை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
TET தேர்வின் தகுதி மதிப்பெண்களில்
TET தேர்வின் தகுதி மதிப்பெண்களில் "இவர்களுக்கு" 15% சலுகை - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
TET தேர்வின் தகுதி மதிப்பெண்களில் “இவர்களுக்கு” 15% சலுகை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

மகாராஷ்டிரா பள்ளிக் கல்வி அமைச்சர் வர்ஷா கெய்க்வாட், இரண்டு முக்கிய திட்டங்கள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மிகவும் நெகிழ்வுடன் குறிப்பிட்டுள்ளார். அந்த 2 திட்டங்கள் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

முக்கிய அறிவிப்பு:

நாடு முழுவதும் பல மாநிலங்களில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது. இந்த வகையில் அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்றுகளுக்கு மத்தியில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் கழித்து மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஜூன் 13 முதல் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் ஜூன் 13 முதல் புதிய கல்வியாண்டுக்காக மாநிலத்தில் உள்ள பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் போது ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் மட்டுமே வருகை தந்தால் போதுமானது என்றும் ஜூன் 15 முதல் மாணவர்கள் பள்ளிக்கு வருவார்கள் என்றும் மீண்டும் அறிவிக்கப்பட்டது.

Exams Daily Mobile App Download

ஏனென்றால் கொரோனா நோய்த்தொற்றுகளின் தொடர்ச்சியான அதிகரிப்பை கவனத்தில் கொண்டு மாணவர்கள் பள்ளிக்கு வரும் முன், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களை பள்ளிக்கு வரவழைத்து வகுப்பறைகளை தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபடுத்த மாநில அரசு முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும் மாணவர்கள் ஜூன் 15 முதல் மீண்டும் பள்ளிக்கு திரும்பி உள்ளனர். இந்நிலையில் மகாராஷ்டிரா பள்ளிக் கல்வி அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் பதவியில் இருந்து விலகி உள்ளார். மேலும் பதிவில் இருந்து கடைசியாக வெளியிட்ட சுற்றறிக்கை மூலம் 2 முடிவுகளை அறிவித்தார்.

தமிழக பள்ளி மாணவர்களுக்கான புதிய அறிவுறுத்தல் – அமைச்சர் அறிவிப்பு!

இது குறித்து வர்ஷா கெய்க்வாட் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது இதயத்திற்கு நெருக்கமான இந்த இரண்டு முடிவுகளுடன் மகாராஷ்டிராவின் பள்ளிக் கல்வி அமைச்சராக நேற்று கையெழுத்திட்டேன். முதலாவது, அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் மராத்தி நடுநிலைப் பள்ளிகளிலும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை, இந்த ஆண்டு முதல் மகிழ்ச்சி பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இரண்டாவது மகாராஷ்டிராவில் ஆசிரியர் தகுதித் தேர்வில் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு தகுதி மதிப்பெண்களில் 15% சலுகை வழங்கப்படும். நாட்டை காப்பதே தேசத்திற்கு செய்யும் மிகப்பெரிய சேவையாகும். அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் துணை நிற்பது நமது கடமை” என்று அதில் குறிப்பிட்டு இருந்தார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!