தமிழகத்தில் 1591 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் – மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!
தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் குறைந்து மீண்டும் பள்ளிகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இந்த நிலையில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணிக்காலம் ஆனது மேலும் 3 வருடங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
ஆசிரியர்கள் கவனத்திற்கு
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் குறிப்பாக அனைத்து பள்ளிகளும் கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது அனைத்து பள்ளிகளும் திறக்கப்படு வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன. அத்துடன் கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றி நேரடி முறையில் வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் ஆசியர்களின் பணியிடத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப முடிவு செய்தனர்
3 முக்கிய மாநிலங்களில் பள்ளி & கல்லூரிகள் மூடல் – விமானங்கள் ரத்து! புயல் எதிரொலி!
அதன்படி முதுகலை ஆசிரியர் பணியிடத்திற்கான தேர்வு கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. அதன்படி முதுகலை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் நிலை-1, கணினி ஆசிரியர் நிலை-1க்கான ஆசிரியர் தகுதி தேர்வு உள்ளிட்ட பணியிடத்திற்கு தேர்வு நடத்தப்பட்டது. மேலும் அரசு பள்ளிகளில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து 2012-2013ஆம் கல்வியாண்டில் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளுக்கு தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
தமிழக அரசு சார்பில் நாளை (பிப்.25) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – இளைஞர்கள் கவனத்திற்கு!
இவர்களுக்கான பணிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தெரிவித்ததாவது, தமிழகத்தில் 2012-2013ஆம் கல்வியாண்டில் 1:40 என்ற ஆசிரியர் : மாணவர் விகிதாச்சாரத்தின் படி கூடுதலாக 1591 ஆசிரியர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டனர். தற்போது இந்த 1591 ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுகள் பணிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது அவர்கள் 2024ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி வரை பணியில் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.