இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா – 15,754 பேருக்கு தொற்று உறுதி!

0
இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா - 15,754 பேருக்கு தொற்று உறுதி!
இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா - 15,754 பேருக்கு தொற்று உறுதி!
இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா – 15,754 பேருக்கு தொற்று உறுதி!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. மேலும் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து இன்று காலை நிலவரப்படி கொரோனா பாதிப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா நிலவரம்:

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பரவி வந்த கொரோனா பரவல் குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். மேலும் நாடு முழுவதும் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று குறைந்து கடைகளும், பள்ளிகளும், வேலை நிறுவனங்கள் போன்றவைகள் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து நாட்டில் குரங்கு அம்மை என்னும் நோய் மக்களை அச்சுறுத்தி வருகிறது. மேலும் இந்த நோய் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது.

இந்த நிலையில் கொரோனா பரவல் மீண்டும் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் தொற்று குறைந்து வருவதாக தகவல் வெளியானது. தற்போது ஒரு நாள் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மக்கள் அனைவரும் தடுப்பூசிகளை செலுத்தி நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் கொரோனாவின் அடுத்த அலை தொடங்கி விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,754 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை: தொடர்ந்து அதிரடியாக குறைந்து வரும் தங்க விலை – உடனே போய் வாங்குங்க!

இந்தியாவில் கடந்த 16ம் தேதி பாதிப்பு 8,813 ஆக இருந்த நிலையில் நேற்று 12,608 ஆகவும் உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதில் அதிகபட்சமாக கர்நாடகாவில் 2,329 பேரும், டெல்லியில் 1, 964 பேரும், மஹாராஷ்டிராவில் 2,246 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 43 லட்சத்து 14 ஆயிரத்து 618 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் தொற்று பாதிப்பிலிருந்து 15,220 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 36 லட்சத்து 85 ஆயிரத்து 535 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கொரோனா சிகிச்சையில் 1,01,830 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக உள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 5,27,253 ஆக உயர்ந்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!