தமிழகத்தில் 1575 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தரம் உயர்வு – அரசாணை வெளியீடு!
தமிழக அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள தற்போது ஆசிரியரின்றி உபரியாக உள்ள 1575 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் முதுகலை ஆசிரியராக தரம் உயர்த்தப்பட்டு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் ஆணை:
தமிழகத்தில் அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் இன்றி உபரியாக உள்ள பணியிடங்களை முதுகலை ஆசிரியர் பணியிடங்களாக உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அரசின் ஆணையில், பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதன் காரணமாக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு 1575 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் முதுகலை ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
இன்று முதல் 38 மணிநேரத்திற்கு முழு ஊரடங்கு அமல் – எவற்றுக்கெல்லாம் அனுமதி?
அரசின் முந்தைய ஆணைகளின் படி, மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் பாட வேளைக்கு ஏற்ப பணியாளர்கள் நிர்ணயம் செய்வது குறித்து கணக்கீடு செய்யப்பட்டதில் அரசு பள்ளிகளுக்கு தற்போது 1984 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பணியிடங்கள் உள்ளது. 2018 -2019 ம் கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்பட்டு கலைப்பிரிவு தொடங்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. கலைப்பிரிவு பாடங்களுக்கான ஆசிரியர்களை கூடுதலாக நியமிக்க வேண்டியுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதற்கான 50% பணியிடங்களை பதவி உயர்வு மூலமாக நிரப்பவும், 50% பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நேரடியாக நியமனம் செய்யவும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். இந்த கோரிக்கையை ஏற்று 1575 ஆசிரியர் பணியிடங்களை முதுகலை ஆசிரிய பட்டதாரி பணியிடங்களாக தரம் உயர்த்தி அரசு ஆணை வெளியிட்டுள்ளது. பாட வாரியாக தேவைப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கையும் அரசு வெளியிட்டுள்ளது.