தமிழக பள்ளி மாணவர்களுக்கு ரூ.1500 உதவித்தொகை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு ஆண்டு முதல் திறனறி தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக அக்டோபர் 1ம் தேதி அன்று நடக்க இருந்த தேர்வின் தேதியில் தற்பொழுது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திறனறி தேர்வு:
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தொடக்க கல்வி முதல் ஆரம்ப கல்வி வரை மாணவர்களின் கல்விக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், கொரோனா கால கட்டத்திற்கு பிறகு அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க தொடங்கியதில் இருந்து கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
இந்நிலையில், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு சார்பில் தமிழ்மொழி திறனறி தேர்வு நடப்பாண்டு முதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தரத்திலான கேள்விகளை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட உள்ள தேர்வில் மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு கொள்குறி வகையில் 100 கேள்விகள் இருக்கும். மொத்தம் 1500 மாணவர்கள் இந்த தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். இவர்களுக்கு மாதம் ரூ.1,500 ஊக்கத்தொகையாக இரண்டு ஆண்டுகளுக்கு அளிக்கப்படும்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? – செப். 22 போராட்டம் அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
இந்த தேர்வில் அரசு, தனியார் பள்ளிகள் மட்டுமல்லாது சிபிஎஸ்ஐ மற்றும் ஐசிஎஸ்இ பள்ளி மாணவர்களும் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்காக பள்ளிகள் மூலமாக செப்டம்பர் 9ம் தேதி வரையிலும் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. முன்னதாக அக்டோபர் 1ம் தேதி அன்று தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது அக்டோபர் 15ம் தேதி அன்று தேர்வு நடத்தப்பட உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்குனர் சேதுராமவர்மா அறிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்