தமிழக பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1500 – அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு வகையான நலத்திட்டங்களை அரசு அறிமுகம் செய்து வருகிறது. இதையடுத்து தற்போது பள்ளி மாணவர்களுக்கு திறனறித் தேர்வு நடத்த உள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
திறனறிவு தேர்வு
தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களின் நலன் கருதி பல்வேறு வகையான நலத்திட்டத்தை அரசு செயற்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக தற்போது அரசு பள்ளி மாணவிகளுக்கு உதவி புரியும் வகையில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் “புதுமைப்பெண்” என்ற பெயரில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இது மாணவிகளின் மேற்படிப்புக்கு பேருதவியாக உள்ளது. இதையடுத்து தற்போது தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் தமிழ்மொழி திறனை மேம்படுத்த “திறனறித் தேர்வு” நடத்த உள்ளதாக அரசு தேர்வு இயக்ககம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் (2022-2023) அனைத்து வகை பள்ளிகளிலும் 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்கள் இத்தேர்வை எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வானது கொள்குறி வகையில் நடத்தப்படுகிறது.
இந்தியா முழுவதும் 14,500 பள்ளிகளின் தரம் உயர்வு – பிரதமர் மோடி அறிவிப்பு!
இத்தேர்வின் பாடத்திட்டம் 10ம் வகுப்பின் பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேட்கப்படுகிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று வருகிற 9ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இத்தேர்வானது வருகிற அக்டோபர் 1ம் தேதி அன்று காலை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வில் வெற்றி பெறும் 1500 மாணவ, மாணவியர்கள் வரை தேர்வு செய்யப்படுவார்கள். இதில் 750 அரசு பள்ளி மாணவர்களும், 750 இதர பள்ளி மாணவர்களுக்கும் 2 ஆண்டுகளுக்கு ரூ.1500 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்