தமிழக பள்ளி மாணவர்களுக்கு ரூ.1500 – விண்ணப்பிக்க இறுதி நாள் அறிவிப்பு!
தமிழக மாணவர்கள் மத்தியில் தமிழ் மொழித் திறனை மேம்படுத்தும் வகையில் 2022 – 2023 ம் கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளில் பயிலும் 11ம் வகுப்பு மாணவர்கள் இத்தேர்வை எழுதலாம்.
திறனறித்தேர்வு:
தமிழக அரசு மொழி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது அந்த வகையில் தற்போது அனைத்து TNPSC போட்டி தேர்வுகளிலும் தமிழ்மொழி தகுதி தேர்வை கொண்டு வந்துள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே உங்களின் அடுத்த பாட பிரிவு வினாக்கள் மதிப்பீடு செய்யப்படும் என்று அரசு பணிகள் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து தமிழ்வழி கல்வி பயின்றவர்களுக்கு அரசு பணிகளில் 25% இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.
EPFO திட்டத்தின் கீழ் பயன் பெறுபவர்கள் கவனத்திற்கு – நிறுவனம் வெளியிட்ட அறிக்கை!
அதன் தொடர்ச்சியாக, தற்போது பள்ளி மாணவர்களிடத்தில் தமிழ் மொழி அறிவை மேம்படுத்தும் வகையில் தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. அரசு தேர்வுகள் இயக்ககம் வாயிலாக ஆண்டுதோறும் இத்தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் 1500 மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1500 உதவித் தொகையாக வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டு இத்தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் செப்டம்பர் 9ம் தேதிக்குள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் இத்தேர்வை 11ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே எழுத முடியும். அத்துடன் திறனறி தேர்வின் பாடத்திட்டம் 10ம் வகுப்பு தமிழ் பாடத்தின் அடிப்படையில் இருக்கும். அதனை தொடர்ந்து வினாக்கள் கொள்கை குறி வகையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வானது அக்டோபர் மாதம் 10ம் தேதி அன்று காலை 10 மணி முதல் 12 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தேர்வுக்கூட அனுமதி சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதனால் மாணவர்கள் பதிவெண்ணை உள்ளீட்டு ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Super