சிவகாசியில் ரூ.150 கோடியில் ESIC மருத்துவமனை – தமிழக அரசின் திட்டம்!

0
சிவகாசியில் ரூ.150 கோடியில் ESIC மருத்துவமனை - தமிழக அரசின் திட்டம்!
சிவகாசியில் ரூ.150 கோடியில் ESIC மருத்துவமனை - தமிழக அரசின் திட்டம்!
சிவகாசியில் ரூ.150 கோடியில் ESIC மருத்துவமனை – தமிழக அரசின் திட்டம்!

தொழிலாளர்கள் நலன் மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக அரசு பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் சிவகாசியில் புதிய ESIC மருத்துவமனையை அதிநவீன வசதிகளுடன் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

ESIC மருத்துவமனை:

நாடு முழுவதும் தொழிலாளர் நலனிற்காக அரசு ESIC மருத்துவமனைகளை நிறுவி அவற்றை பராமரித்து வருகிறது. இதன் மூலம் தொழிலாளர்கள் அவர்களின் மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ளலாம். இந்நிலையில், சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் ஏற்படும் அசம்பாவிதங்களில் அதிக தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

Follow our Instagram for more Latest Updates

நேற்று சிவகாசியில் பட்டாசு பாதுகாப்பு பயிலரங்கம் நடந்தது. அதில், தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு அமைச்சர், வருவாய்த்துறை அமைச்சர் மற்றும் பல முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் அவர்கள், பட்டாசு ஆலை பணியாளர்கள் 56,000 பேர் ESIC-யில் பதிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

தமிழகத்தில் 6 வகையான பூச்சி மருந்துகளுக்கு தடை – அரசாணை வெளியீடு!

Exams Daily Mobile App Download

அவர்களின் நலன் கருதி சிவகாசியில் 16 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு அங்கு ரூ.150 கோடி மதிப்பில் அதிநவீன ESIC மருத்துவமனை அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தினை தமிழக அரசு மத்திய அரசிடம் அனுப்பியுள்ளதாகவும், விரைவில் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!