தமிழக அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 15% கூடுதல் மாணவர் சேர்க்கை – உயர்கல்வித்துறை அமைச்சர்!
தமிழகத்தில் அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் இருந்த 10% கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்கள் 15% ஆக உயர்த்த முதல்வருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
கூடுதல் மாணவர் சேர்க்கை :
தமிழகத்தில் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்கள் வெளியானதை அடுத்து கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி முதல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கியது. நடப்பு ஆண்டு கொரோனா பரவலால் 12ம் வகுப்பிற்கு பொதுத் தேர்வுகள் இன்றி மதிப்பிட்டு முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டதால் அனைவரும் ஆல் பாஸ் செய்துள்ளனர். அதனால் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு கடும் போட்டி நிலவுகிறது. அதனால் அரசு கல்லூரிகளில் 25% கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு உயர்கல்வித்துறை உத்தரவிட்டது.
TCS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள் – செப்.24 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!
அதே போல அரசு உதவிபெறும் கல்லூரிகளுக்கு 10% கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு இடம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சட்ட பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அரசு உதவி பெறும் கல்லூரிகளில் நடைமுறையில் 2021 -2022 ம் கல்வியாண்டில் இருக்கும் 10% கூடுதல் மாணவர் சேர்க்கை 15% ஆக உயர்த்த முதல்வருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து சட்ட பேரவையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் புதிய அரசு கலை கல்லூரி அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – டெபிட் கார்டு மூலம் கடன் உதவி!
அதற்கு ஏற்கனவே மதுரையில் 3 அரசு கல்லூரிகள், 17 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 21 சுயநிதி கல்லூரிகள், 12 பொறியியல் கல்லூரிகள், 17 பல்வகை தொழில்நுட்ப கல்லூரிகள் உள்ளது அதோடு தற்போது இந்த ஆண்டு 21 கல்லூரிகள் தொடங்க அரசு உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் இருக்கும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் இது முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பொன்முடி பதிலளித்தார்.