15% கல்வி கட்டணத்தை திரும்ப வழங்க வேண்டும்.. தனியார் பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் கொரோனா காலத்தில் கல்வி கட்டணத்தை செலுத்த கூறி தனியார் பள்ளி நிர்வாகங்கள் பெற்றோர்களை வலியுறுத்தியது. இது குறித்து அளிக்கப்பட்ட மனு மீதான விசாரணையில் நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
கல்வி கட்டணம்:
இந்தியாவில் கடந்த 2020-2021ம் ஆண்டில் பரவிய கொரோனா பெருந்தொற்றின் போது மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் மாணவர்களுக்கு கல்வி ஆன்லைன் வாயிலாக கற்பிக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் தனியார் கல்வி நிறுவனங்கள் கல்வி கட்டணத்தை செலுத்தும் படி பெற்றோர்களை வலியுறுத்தினர்.
தமிழகத்தில் 4,308 மருத்துவ பணியிடங்களில் ‘இவர்களுக்கு’ முன்னுரிமை – சுகாதாரத் துறை அமைச்சர் உறுதி!!
Follow our Instagram for more Latest Updates
ஏற்கனவே கொரோனா ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரம் இழந்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ள நிலையில் கல்வி கட்டணம் மாணவர்கள் பெற்றோர்களுக்கு பெரும் சுமை ஆக இருந்தது. இந்த கல்வி கட்டணத்தை எதிர்த்து மனு ஒன்று உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கொரோனா கால கட்டத்தில் எந்த சேவையும் அளிக்காமல் கல்வி கட்டணத்தை செலுத்த வலியுறுத்தியது லாப நோக்கில் செய்யப்பட்டது என்று மனுதாரர் சுட்டிக்காட்டினார்.
இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் 2020 – 2021 காலகட்டத்தில் மாணவர்களிடம் வசூலித்த மொத்த கல்வி கட்டணத்தில் இருந்து 15% தொகையை அனைத்து தனியார் பள்ளிகளும் பெற்றோர்களுக்கு திரும்ப வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பள்ளியை விட்டு இடை நின்ற மாணவர்களுக்கும் இந்த 15% தொகையை அளிக்க வேண்டும் என்றும் இன்னும் 2 மாதங்களில் இந்த நடைமுறையை முடித்தாக வேண்டும் என்றும் தனியார் பள்ளிகளுக்கு உத்திரபிரதேச மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.