பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் 15 நாட்கள் மட்டும் கோடை விடுமுறை – அரசு முக்கிய அறிவிப்பு!
டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு நாளை (மே 11, 2022) முதல் ஜூன் 28ம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்க ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அந்த முடிவை அதிகாரிகள் மாற்றி சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளனர்.
கோடை விடுமுறை:
கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்து வழக்கம் போல பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. சில மாநிலங்களில் வெயில் வாட்டி வதைத்ததால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் செயல்படும் நேரமும் மாற்றி அமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஆண்டு இறுதித்தேர்வுகள் நிறைவடைந்து விடுமுறை குறித்து அறிவிப்பு வெளியாகிய வண்ணம் உள்ளது. அந்த வகையில் ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் கோடை விடுமுறைக்காக காத்திருக்கின்றனர். இருப்பினும் இந்த ஆண்டு டில்லி அரசுப் பள்ளிகளில் இரண்டு மாதங்களுக்குப் பதிலாக 15 நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட உள்ளது.
அதன்படி 3ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறைகள் ஜூன் 15 முதல் ஜூன் 30 வரை 15 நாட்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில், கல்வித்துறையில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாணவர்களிடையே கற்றல் இடைவெளி ஏற்பட்டுள்ளதாக அரசு கருதுகிறது. இந்த இடைவெளியை போக்க அரசு பள்ளிகளில், 35 நாட்கள் கூடுதல் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இதனால் நர்சரி முதல் 2ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மட்டுமே கோடை விடுமுறையை முழுமையாகப் பெற முடியும். மூன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை எதிர்காலத்திற்கு தயார்படுத்தும் வகையில் வகுப்புகள் ஏற்பாடு செய்யப்படும். அதே சமயம், 10 முதல் 12ம் வகுப்பு வரையிலான பொதுத்தேர்வுகளை கருத்தில் கொண்டு, கோடை விடுமுறையில் தயாராவதற்கான வகுப்புகள் முன்னதாகவே நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.