பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -15 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை!
மாநிலத்தில் இருவருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை ரேண்டமாக கோவிட் பரிசோதனை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரிசோதனை
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு கால வரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. தினசரி வகுப்புகள் ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வந்தது. அதன் பிறகு தடுப்பூசிகள் பயன்பட்டால் இந்தியா முழுவதும் பாதிப்புகள் குறைந்து வந்தது. இந்த நிலையில் படிப்படியாக ஒவ்வொரு மாநிலமாக கல்வித்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து மேல்நிலை வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
SBI ATM கார்டை ஆன்லைனில் பிளாக் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
இந்த நிலையில் அடுத்த தாக்குதலாக கொரோனா வைரஸில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் வேகமாக பரவும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். தென்னாபிரிக்காவில் இருந்து இந்தியா வந்த கர்நாடகாவை சேர்ந்த 2 பேருக்கு ஓமைக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பெங்களூரு, தும்குரு, ஷிவமோகா உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி – 95% ஆய்வுப்பணி நிறைவு! அமைச்சர் தகவல்!
இதனால் நோய் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் கலை நிகழ்ச்சிகள், சிறப்பு நிகழ்வுகள் போன்றவற்றை வரும் ஜனவரி 15ம் தேதி வரை தள்ளி வைக்க அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகளில் பங்கேற்கும் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.