டிச.1 முதல் பள்ளிகள் திறப்பு கிடையாது, 15 நாட்கள் ஒத்திவைப்பு – கொரோனா பரவல் எதிரொலி!
இந்தியாவில் கொரோனா வைரஸின் ஓமிக்ரான் மாறுபாடு எச்சரிப்பு காரணமாக, மும்பை மாநகரில் வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த தேதி டிசம்பர் 15 என மாற்றியமைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பள்ளிகள் திறப்பு
நாடு முழுவதும் தற்போது கொரோனா 2ம் அலைத்தொற்று ஓய்ந்திருக்கக்கூடிய இந்த சூழலில் உலக நாடுகளை ஓமிக்ரான் என்று சொல்லக்கூடிய கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு அச்சுறுத்தி வருகிறது. இந்த புதிய மாறுபாடு வைரஸ் மிக உயர்ந்த உலகளாவிய ஆபத்தை ஏற்படுத்து எனவும் இதன் எழுச்சி அதிகமாக இருக்கும் இடங்களில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது. அதனால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இந்த ஓமிக்ரான் வைரஸின் தாக்கத்தை எதிர்கொள்ள முன் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழக அரசில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்கள் கவனத்திற்கு – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
இதற்கிடையில் மஹாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை மாநகரில் 1 முதல் 7 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கான பள்ளிகள் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஓமிக்ரான் வைரஸின் தாக்கம் காரணமாக, இப்போது டிசம்பர் 15 ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் தொடங்கும் என்று பிரிஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. அந்த வகையில் வகுப்புகளை மூன்று முதல் நான்கு மணி நேர இடைவெளியில் இயக்குவதற்கு அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தின் 3 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
மேலும் மாணவர்கள் குழுக்களாக அழைக்கப்படுவார்கள் என்றும் மும்பை பிராந்தியங்களில் பள்ளிகளை மீண்டும் திறக்கும் முடிவு இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும் கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்துள்ளார். மேலும், மாணவர்கள் விரும்பினால் ஆப்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ளலாம் என்றும் அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது. இப்போது, டிசம்பர் 15 முதல் பள்ளிகள் திறக்கப்படும் போது ஒரு வகுப்பறையில் 15 முதல் 20 மாணவர்கள் மட்டுமே இருப்பதை பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.