தமிழகத்தில் மின்கட்டணம் செலுத்த 15 நாட்கள் கால அவகாசம் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் மின்கட்டணம் செலுத்த 15 நாட்கள் கால அவகாசம் - அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் மின்கட்டணம் செலுத்த 15 நாட்கள் கால அவகாசம் - அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் மின்கட்டணம் செலுத்த 15 நாட்கள் கால அவகாசம் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மின் பயனர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதற்கு 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கால அவகாசம்:

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பதவியேற்ற நாள் முதல் அரசின் அனைத்து துறைகளிலும் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது. அந்த வகையில் மின்சார துறையில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. மின் தொடர்பான புகார்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய சென்னையில் மின் புகார் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது மாதந்தோறும் அனைத்து மாவட்டங்களிலும் மின் பராமரிப்பு பணிகள் தவறாது நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருவதை அடுத்து மின்கசிவு ஏற்படாத வண்ணம் அனைத்து பகுதிகளையும் மின்சாரத்துறை கவனித்து வருகிறது.

தமிழக போக்குவரத்து கழக தற்காலிக ஓட்டுநர், நடத்துனர்கள் கவனத்திற்கு – அமைச்சர் அறிவிப்பு!

இந்த நிலையில் வடகிழக்கு பருவ மழையால் தொடர்ந்து பெய்து வரும் அதிக கனமழையால் அதிகம் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் பயனர்கள் மின் கட்டணம் செலுத்துவதற்கு 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். ஏற்கனவே கொரோனா இரண்டாம் அலையால் விதிக்கப்பட்ட ஊரடங்கால் மக்கள் வருமானம் இன்றி பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு இருந்த போது மக்களுக்கு மின் கட்டணம் செலுத்த சலுகைகளும் கூடுதல் கால அவகாசமும் வழங்கப்பட்டது.

தமிழக போக்குவரத்து கழக தற்காலிக ஓட்டுநர், நடத்துனர்கள் கவனத்திற்கு – அமைச்சர் அறிவிப்பு!

அதனை தொடர்ந்து தற்போது தொடர்ந்து பெய்த கனமழையால் சாலைகளில் சூழ்ந்துள்ள வெள்ளப்பெருக்கால் வெளியில் வர முடியாத நிலையில் உள்ளனர். அதனால் அவர்களை கருத்தில் கொண்டு மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்படுவதாக தெரிவித்தார். மழை பாதிப்பால் வடசென்னை அனல்மின் நிலையத்தில் 400 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது தூத்துக்குடி மற்றும் மேட்டூர் மின் உற்பத்தி நிலையங்களில் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தகவல் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!