பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடல்? 149 மாணவர்களுக்கு கொரோனா உறுதி! அவசர ஆலோசனை!

0
பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடல்? 149 மாணவர்களுக்கு கொரோனா உறுதி! அவசர ஆலோசனை!
பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடல்? 149 மாணவர்களுக்கு கொரோனா உறுதி! அவசர ஆலோசனை!
பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடல்? 149 மாணவர்களுக்கு கொரோனா உறுதி! அவசர ஆலோசனை!

கர்நாடகா மாநிலத்தில் 149 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அம்மாநிலத்தில் பள்ளிகளை மூடுவது குறித்து முதல்வர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

மாணவர்களுக்கு கொரோனா:

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் தொற்று தீவிரமெடுத்து பரவி வருகிறது. இந்த தொற்று தென்னாப்பிரிக்காவில் முதலில் பரவத் தொடங்கியது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்திய வந்த கர்நாடகாவை சேர்ந்த இருவருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் பிப்ரவரி மாதம் ஊரடங்கு அமல் – ஒமைக்ரானால் 3வது அலை! பேராசிரியர் கணிப்பு!

இந்த நிலையில் கர்நாடகாவில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் பெங்களூரு, மைசூரு, தார்வாட், தும்கூரு ஆகிய மாவட்டங்களில் மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது . இந்த வைரஸ் ஓமைக்ரான் வைரஸ் தொற்றாக இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. பள்ளி மாணவர்களை தொடர்ந்து ஷிமோகாவில் உள்ள நர்சிங் கல்லூரி மாணவர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Post Office ரூ.5000 முதல் முதலீட்டில் அதிக வருமானம் – சூப்பரான 2 திட்டங்கள்! முழு விபரம் இதோ!

இவ்வாறு கர்நாடகாவில் தொடர்ந்து மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் அம்மாநில முதல் சுகாதார அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது கொரோனா தொற்று அதிகம் பரவி வரும் பள்ளிகளை மூட உத்தரவிட்டார். மேலும் மாணவர்களின் பெற்றோர் இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்வி நிலையங்களை மூட நிபுணர்கள் அடங்கிய குழு வலியுறுத்தினால் அரசு ஆலோசித்து முடிவெடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!