தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு 148 நாட்கள் விடுமுறை? புதிய உத்தரவு!
நடப்பு கல்வியாண்டில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் மொத்தம் 148 நாட்கள் வரை விடுமுறை அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் விரிவாக காணலாம்.
விடுமுறை அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா பரவலால் ஏற்பட்ட இடையூறுகளுக்கு மத்தியில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் அனைத்தும் கடந்த பிப்ரவரி மாதம் முதல் மீண்டுமாக திறக்கப்பட்டது. அந்த வகையில் கொரோனா 3ம் அலை தொற்று ஓய்ந்து வந்ததையடுத்து 1 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் துவங்கியது. மேலும், கொரோனா பாதிப்புகள் நிமித்தமாக கடந்த கல்வியாண்டிற்கான வகுப்புகள் தாமதமாக துவங்கியதால், தேர்வுகள் முடிவடைந்தவுடன் கோடை விடுமுறையும் தாமதமாக அளிக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
தொடர்ந்து அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஒரு மாத கால கோடை விடுமுறைக்கு பின்பாக ஜூன் 13ம் தேதி முதல் 1 லிருந்து 10 வரையுள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது துவங்கி இருக்கும் புதிய கல்வியாண்டுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சமீபத்தில் வெளியிட்டார். இந்த விடுமுறை பட்டியலின் படி, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான விடுமுறை 148 நாட்கள் வரை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அரசு பொது விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்களும் அடங்கும்.
TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – மதிப்பெண் பெற எளிய வழிமுறைகள் இதோ!
இது தவிர 2022-23ம் கல்வியாண்டில் சுமார் 210 நாட்கள் பள்ளி வேலை நாட்களாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர கல்வித்துறையின் கூடுதல் பணிகளுக்கு 7 நாட்கள் வரை பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசுப்பள்ளிகளுக்கான முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பருவத்தேர்வு குறித்த அறிவிப்புகளும் இதில் இடம் பெற்றிருந்தது. தொடர்ந்து நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு ஏப்ரல் 29 முதல் மே 31 வரை 32 நாட்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.