பஞ்சாப் நேஷனல் (PNB) வங்கியில் 145 காலிப்பணியிடங்கள் – உடனே விண்ணப்பிக்கவும்!
பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு:
பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பை தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் மொத்தமாக145 காலிப்பணியிடங்கள் உள்ளன. அதில் மேலாளர் ( ரிஸ்க்) பணிக்கு 40 காலிப் பணியிடமும், மேலாளர் ( கிரடிட்) பணிக்கு 100 காலிப் பணியிடமும் உள்ளது. கணக்குத் தணிக்கையாளர் அல்லது ஏதோ ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று நிதியியல் பிரிவில் எம்பிஏ முடித்து இருப்பவர்கள் இந்த பஞ்சாப் நேஷனல் வங்கியில் உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – தேர்வர்கள் கவனத்திற்கு!
01.01.2022 தேதியின்படி கருவூலம் பணிக்கு 25 முதல் 37 வயதிற்குள் வயது வரம்பு இருக்க வேண்டும் மற்றும் மற்ற பணியிடங்களுக்கு 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையிலேயே திறமையான பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் முதலிய இடங்களில் எல்லாம் தேர்வு மையம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.pnbindia.in/ என்கிற அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று ஆன்லைனிலேயே விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பக் கட்டணமாக எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு ரூபாய் 50 மற்றும் மற்ற பிரிவினர் ரூ.850 செலுத்த வேண்டும். பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 7 மே தான் கடைசி தேதி என்பதால் அதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.