ஆகஸ்ட் 14 ஆம் தேதி நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு – மணிப்பூர் அரசு அறிவிப்பு!
தட்சிண கன்னடா பகுதிகளில் அடுத்தடுத்து கொலை சம்பவம் அரங்கேறி வருவதால் அந்த பகுதி முழுக்க பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதனால், ஆகஸ்ட் 14 ஆம் தேதி நள்ளிரவு வரைக்கும் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
144 தடை உத்தரவு:
தட்சிண கன்னடாவில் கடந்த ஜூலை 26 ஆம் தேதி பாஜக தொண்டர் பிரவீன் நெட்டாரு கன்னடாவில் உள்ள பெல்லாரேயில் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, கொலை சம்பவத்தில் ஈடுப்பட்ட 2 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும், இந்த சம்பவத்திற்கு முன்பாகவே கன்னடாவின் சுல்லியாவில் 19 வயது இளைஞர் முகமது மசூத் 8க்கும் மேற்பட்ட மர்ம நபர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
Exams Daily Mobile App Download
இந்த கொலை சம்பவமே அங்குள்ள பொது பொதுமக்களை மிகவும் அச்சுறுத்தியது. இந்த கொலை வழக்கை தொடர்ந்து கடந்த ஜூலை 28 ஆம் தேதி கர்நாடகா மாநிலம் மங்களூருவின் புறநகர்ப் பகுதியில் 23 வயதான ஃபாசில் அடையாளம் தெரியாத நபர்களால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து கர்நாடகா மாநிலத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூடும்படி அறிவுறுத்தப்பட்டது. மேலும், இந்த சம்பவத்தினை தொடர்ந்து சூரத்கல், முல்கி, பாஜ்பே மற்றும் பனம்பூர் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு செய்யப்பட்டது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம் – தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பு
மேலும், சூரத்கல் கிருஷ்ணாபுரா கடிபல்லா சாலை பகுதிகளில் 23 வயது இளைஞன் மூன்றிற்கும் மேற்பட்ட நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவமும் நடைபெற்றது. அடுத்தடுத்து கொலை சம்பவம் அரங்கேறியதால் ஆகஸ்ட் 14 ஆம் தேதி நள்ளிரவு வரைக்கும் 144 தடை உத்தரவு என தட்சிண கன்னடா துணை ஆணையர் டாக்டர் ராஜேந்திர கே.வி தெரிவித்திருந்தார். மேலும், ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு பிறகு அனைத்து மதுபானக்கடைகளும் வழக்கம் போல செயல்பட்டு வருகிறது.