மாவட்டத்தில் 144 உத்தரவு பிறப்பிப்பு – போராட்ட எதிரொலி! அரசின் திடீர் உத்தரவு!
மத்திய அரசு இராணுவத்தில் ஆட்சேர்ப்பதற்கான புதிய திட்டத்தை துவங்கியுள்ளதால் பீகார், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அரியானா மாநிலத்தின் குருகிராமில்144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
144 தடை உத்தரவு:
இந்திய ராணுவத்தில் தற்காலிக மற்றும் நிரந்தர அடிப்படையில் ராணுவ வீரர்களை தேர்வு செய்து வருகின்றனர். தற்காலிக அடிப்படையில் தேர்வு செய்யப்படும் ராணுவ வீரர்கள் 10 ஆண்டுகள் வரைக்கும் இந்திய ராணுவத் துறையில் பணியாற்றலாம் மற்றும் நிரந்தர அடிப்படையில் தேர்வு செய்யப்படும் ராணுவ வீரர்கள் ஓய்வு பெறும் வயது வரைக்கும் இந்திய ராணுவத்தில் பணியாற்ற முடியும். ஆனால், மத்திய அரசு கடந்த ஜூன் 14-ஆம் தேதி இந்திய ராணுவத்தில் ஆட் சேர்ப்பதற்கான புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
Exams Daily Mobile App Download
மத்திய அரசாங்கத்தால் துவங்கப்பட்டுள்ள இந்த புதிய திட்டத்திற்கு பீகார், உத்தரபிரதேசம், அரியானா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சாலைகளில் டயர்களை எரித்தும், பேருந்துகளை அடித்து நொறுக்கியும், ரயில்களில் தீ வைத்தும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இளைஞர்களின் இந்த போராட்டத்தால் பீஹார், ஹரியானா உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
தொடர்ந்து இளைஞர்கள் கலவரத்தில் ஈடுபட்டு வருவதால் அரியானா மாநிலத்தின் குருகிராமில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அரியானாவில் போராட்டம் நடைபெறும் சில பகுதிகள் முழுவதும் இணைய சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன. அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் செய்து வருவதால் அங்குள்ள இணைய சேவைகள், ரயில் சேவைகள், போக்குவரத்து சேவைகள் அனைத்துமே முடக்கப்பட்டுள்ளன.