டிசம்பர் 31 வரை 144 தடை உத்தரவு அமல் – மாநில அரசு அதிரடி அறிவிப்பு!

0
டிசம்பர் 31 வரை 144 தடை உத்தரவு அமல் - மாநில அரசு அதிரடி அறிவிப்பு!
டிசம்பர் 31 வரை 144 தடை உத்தரவு அமல் - மாநில அரசு அதிரடி அறிவிப்பு!
டிசம்பர் 31 வரை 144 தடை உத்தரவு அமல் – மாநில அரசு அதிரடி அறிவிப்பு!

மஹாராஷ்டிராவில் அதிகரித்து வரும் ஓமைக்ரான் தொற்றை தடுக்கும் பணியாக அம்மாநிலத்தின் தலைநகர் மும்பையில் டிசம்பர் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் எதிர்க்கப்படுகிறது.

144 தடை உத்தரவு:

இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமெடுத்து பரவி வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தனர். குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலம் தொற்று பரவல் மையமாகவே மாறியது. இந்தியாவில் அதிகம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்தது. அதனால் அம்மாநிலத்தில் நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. மேலும் பொது மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகளையும் அம்மாநில அரசு விதித்தது. இந்த தடுப்பு பணியின் ஒருபகுதியாக கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.

SBI PO முதல்நிலை தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு – முழு விவரம் இதோ!

இதன் விளைவாக அம்மாநிலத்தில் ஓரளவு தொற்று குறைந்து வரும் நிலையில் தற்போது அடுத்த தாக்குதலாக கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த புதிய வகை ஓமைக்ரான் வைரஸ் தொற்று பரவி வருகிறது. இன்று மட்டும் புதிதாக மஹாராஷ்டிராவில் 8 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதியாகி உள்ளது. இந்த தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் ஏழு பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள் என்று சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை அம்மாநிலத்தில் 28 பேருக்கு ஓமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் TET தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

இந்த ஓமைக்ரான் அதிக வீரியத்துடன் பரவும் தன்மை கொண்டது என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இது மூன்றாம் அலை கொரோனா பரவலாக இருக்குமோ என்ற அச்சம் நிலவி வருகிறது. இந்த நிலையில் ஓமைக்ரான் தொற்று அதிகம் பரவி வரும் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தடுப்பு நடவடிக்கையாக டிசம்பர் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த வரவிருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!