144 தடை உத்தரவு அமல், பள்ளிகளுக்கு விடுமுறை – பிரதமர் மோடி வருகை எதிரொலி!
டிசம்பர் 4 ஆம் தேதியான இன்று உத்தரகாண்டில் பிரதமர் மோடி சுற்றுப்பயண நிகழ்ச்சி மற்றும் பரேட் மைதானத்தில் பொதுக் கூட்டத்தை கருத்தில் கொண்டு, 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
144 தடை உத்தரவு:
உத்தரகாண்டில் பிரதமர் மோடி அவர்கள் டிசம்பர் 4 ஆம் தேதியான இன்று சுற்றுப்பயணம் மற்றும் பரேட் மைதானத்தில் பொதுக் கூட்டத்தில் கொள்கிறார். இதனால் அனைத்து அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களை பரேட் மைதானத்தின் 500 மீ அருகில் முழுமையாக மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் இன்று பிரதமர் நரேந்திர மோடியின் வருகையைக் கருத்தில் கொண்டு உத்தரகாண்டின் டேராடூனில் உள்ள கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும் மற்றும் CrPC இன் பிரிவு 144 தடை உத்தரவு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அமலுக்கு வரும் என்று மாவட்ட நீதிபதி டாக்டர் ஆர் ராஜேஷ் குமார் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் மினி ஊரடங்கு, பொது இடங்களுக்கு செல்ல தடை – மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு!
பரேட் மைதானத்தின் 1 கிமீ சுற்றளவில் டிசம்பர் 3 ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் டிசம்பர் 4 ஆம் தேதி மாலை 4 மணி வரை CrPC பிரிவு 144 உத்தரவு அமலுக்கு வரும். இதனால் ஹோட்டல்கள் / லாட்ஜ்கள் / தர்மஷாலா நபர்களின் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி டேராடூனில் சுமார் 18,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க உள்ளார். இதில் டெல்லி-டேராடூன் பொருளாதார வழித்தடமும் சுமார் ரூ.8,300 கோடி செலவில் கட்டப்படும். இது டெல்லியில் இருந்து டேராடூனுக்கு ஆறு மணி நேரத்திலிருந்து சுமார் 2.5 மணிநேரமாக பயண நேரத்தை கணிசமாகக் குறைக்கும் திட்டமாகும்.
இந்தியாவில் மேலும் ஒருவருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி – பொதுமக்கள் அச்சம்!
டேராடூனில் உள்ள தட் காளி கோவில் அருகே 340 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை திட்டம், டெல்லி-டேராடூன் பொருளாதார வழித்தடத்தில் இருந்து கிரீன்ஃபீல்ட் சீரமைப்பு திட்டம், ஹரித்வார் ரிங்ரோடு திட்டம், நஜிபாபாத்-கோட்வார் சாலை விரிவாக்கத் திட்டம், டெஹ்ராடூனில் உள்ள குழந்தைகள் நட்பு நகரத் திட்டம், மேலும், ஹரித்வாரில் ஒரு புதிய மருத்துவக் கல்லூரி ரூ. 500 கோடி செலவில் கட்டப்படும் திட்டம் தேவ்பிரயாக் முதல் ஸ்ரீகோட் வரையிலான சாலை விரிவாக்கத் திட்டம், யமுனையின் மேல் 1700 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 120 மெகாவாட் திறன் கொண்ட வைசி நீர்மின் திட்டம் மற்றும் டேராடூனில் உள்ள அரோமா ஆய்வகம் போன்ற திட்டங்களை பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.