மாநிலத்தின் இரு பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு – அரசு அதிரடி நடவடிக்கை!
கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரத்தில் மாணவர்கள் கலவரத்தில் இறங்கியுள்ளனர். அதனால் கலவரத்தை கட்டுப்படுத்த மாநிலத்தின் இரு பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை தற்போது விரிவாக பார்க்கலாம்.
144 தடை உத்தரவு :
கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதத்தில் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லீம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி வழங்கப்படவில்லை. அதனால் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் கல்லூரி நிர்வாகம் தங்களது உடை விவகாரத்தில் தலையிடுவதாக மாணவிகள் சார்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஷிவமொக்கா மாவட்டத்தின் பாபுஜி நகரிலுள்ள கல்லூரி மாணவர்கள் ஹிஜாப் அணிவதற்கு ஆதரவு தெரிவித்தனர்.
LIC ஆணையத்தில் 100 காலிப்பணியிடங்கள் – கல்வித்தகுதி, ஊதியம் & முழு விவரங்களுடன்…!
ஹிஜாப் போராட்டத்துக்கு எதிராக சில மாணவர்கள் காவித் துண்டு அணியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஹிஜாப் அணிந்து வர அனுமதிக்கப்பட்டால் தங்களுக்கு காவித் துண்டு அணிந்து வருவதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் காவி துண்டு அணிந்து வந்த மாணவர்கள் ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷம் எழுப்பினர். இதற்கு பதிலடியாக முஸ்லிம் மாணவிகள் நீலத் துண்டு அணிந்து ஜெய் பீம் கோஷத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஷிமோகா நகரில் கல்லூரி ஒன்றில் தேசியக் கொடி இருக்கும் இடத்தில் காவிக் கொடியை சில மாணவர்கள் ஏற்றி பரப்பரப்பை ஏற்படுத்தினார்கள்.
Post Office செல்வமகள் சேமிப்பு திட்டம் – குறைந்தபட்ச முதலீடு ரூ.250! சிறந்த வட்டி விகிதம்!
இதனை தொடர்ந்து ஒரு சமயத்தில் இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கிக் கொள்ள தொடங்கினார்கள். அதனால் கலவரத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல் துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். அதேபோல் பாகல்கோட் பகுதியிலும் மாணவர்கள் கற்களை வீசித் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் காரணமாக இந்த இரண்டு பகுதிகளிலும் மிகவும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. கலவரத்தை கட்டுப்படுத்த இந்த இரு பகுதிகளிலும் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.