144 தடை உத்தரவு அமல் – மாநில அரசு அதிரடி அறிவிப்பு!
மத்தியப் பிரதேச மாநிலத்தில் பயங்கர மோதல் ஏற்பட்டதை அடுத்து, பதற்றம் நிறைந்த இடங்களில் 144 தடை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இப்பகுதிகளில் தடையை மீறி கூட்டம் கூடினாலும், பேரணி உள்ளிட்டவைகளை மேற்கொண்டாலோ, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திடீர் உத்தரவு:
நாடு முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. தற்போது தாக்கம் குறைந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்பட்டு உள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் முதல் ஒரு சில மாநிலங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் ஊரடங்கு போடப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கிற்கு காரணம் இரு சமூகத்தினர் இடையே பயங்கர மோதல் தான். இந்த வரிசையில் முன்னதாக ரமலான் பண்டிகையை முன்னிட்டு, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஜலோரி கேட்டில் கொடி மற்றும் ஒலிபெருக்கி பொருத்துவது தொடர்பாக இரு சமூகத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? வலுக்கும் போராட்டம்!
ஆர்ப்பாட்டக்காரர்கள் கொடி மற்றும் பேனரை அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மற்ற சமூகத்தினர் ஆத்திரமடைந்து இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு சமூகத்தினரும் ஒருவருக்கு ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். இதில் அங்கிருந்த வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. போலீசார் மீதும் கற்கள் வீசப்பட்டன. இதன் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஒரு பகுதியிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் காரணம், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு தான்.
Exams Daily Mobile App Download
மத்தியப் பிரதேச மாநிலம் நீமுச் நகரில் தர்காவில் அனுமன் சிலையை நிறுவுவது தொடர்பாக இரு குழுக்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. எம்பியின் நீமுச்சின் பழைய கோர்ட் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதன் காரணமாக நீமுச் நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரு குழுக்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். இதனை தொடர்ந்து மோதலில் ஈடுபட்டவர்களை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர்.