தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டத்திற்கு 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு – திடீர் அறிவிப்பு!
ராமநாதபுரம் மாவட்டத்தில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு இன்று முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் தற்போது வெளியிட்டுள்ளார்.
144 தடை உத்தரவு
தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய தமிழக அரசியல் தலைவரான இம்மானுவேல் சேகரனின் நினைவு தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். அதேபோல தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜை நிகழ்வும் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுமே கொரோனா பரவலின் காரணமாக இம்மானுவேல் சேகரனாரின் நினைவு தினம் மற்றும் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை தின கொண்டாட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை.
தமிழகத்தில் நாளை (செப். 09) ‘இந்த’ பகுதிகளில் மின்தடை – மின்வாரியம் அறிவிப்பு!
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு தான் இம்மானுவேல் சேகரனாரின் நினைவு தினம் மற்றும் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை ஆகிய இரண்டு நிகழ்ச்சியும் மிகவும் சிறப்பாக நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இமானுவேல் சேகரனாரின் நினைவு தினம் மற்றும் முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜை உள்ளிட்ட நிகழ்வுகளுக்காக சட்ட ஒழுங்கு பாதுகாப்பு நடைமுறையை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என்பதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த 144 தடை உத்தரவு இன்று இரவு முதல் அக்டோபர் 31-ஆம் தேதி வரைக்கும் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு அமலில் இருக்கும் எனவும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தை தவிர்த்து வெளி மாவட்டத்தை சேர்ந்த வாடகை வாகனங்கள் உரிய அனுமதியின்றி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்