தமிழகத்தில் 1436 VAO காலிப்பணியிடங்கள் -TNPSC குரூப் 4 தேர்வு விரைவில் அறிவிப்பு!

0
தமிழகத்தில் 1436 VAO காலிப்பணியிடங்கள் -TNPSC குரூப் 4 தேர்வு விரைவில் அறிவிப்பு!
தமிழகத்தில் 1436 VAO காலிப்பணியிடங்கள் -TNPSC குரூப் 4 தேர்வு விரைவில் அறிவிப்பு!
தமிழகத்தில் 1436 VAO காலிப்பணியிடங்கள் -TNPSC குரூப் 4 தேர்வு விரைவில் அறிவிப்பு!

தமிழகத்தில் 1436 கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்கள் உள்ளது. இதனை உடனடியாக நிரப்ப கோரிக்கைகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால் விரைவில் TNPSC தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC தேர்வுகள்:

தமிழகத்தில் அரசுத்துறை பணிகளுக்கு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். மேலும் துறைகள் மற்றும் அதற்கு தேவையான கல்வித்தகுதியை பொறுத்து குரூப் 1, குரூப் 2, குரூப் 4 மற்றும் டெட் போன்ற தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதற்கான காலிப்பணியிடங்களை பொறுத்து தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகிறது. அதனை தொடர்ந்து இணையதளத்தில் விண்ணப்பித்து போட்டித் தேர்வை எழுதலாம். இதில் குரூப் 4 தேர்வுவை லட்சக்கணக்கான நபர்கள் எழுதுகின்றனர்.

தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் கவனத்திற்கு – ஈடுசெய் விடுப்பு விளக்கம்!

இந்த குரூப் 4 தேர்வானது இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர் ஆகிய ற பணியிடங்களுக்கு நடத்தப்படுகிறது. முதலில் விஏஓ தேர்வுகள் தனியாக நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது குரூப் 4 தேர்வுகளுடன் சேர்த்தே விஏஓ தேர்வு நடத்தப்படுகிறது. இந்த குரூப் 4 தேர்வில் மொழிப்பாடம் மற்றும் பொது அறிவு என மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் 1.5 மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறுகிறது.

EPFO அக்கவுண்ட் பேலன்சை அறிந்து கொள்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

கடந்த இரண்டு ஆண்டுகளாக பரவி வரும் கொரோனா பெருந்தொற்று காரணமாக குரூப் 4 தேர்வுகள் நடைபெறவில்லை அதனால் தற்போது தமிழகத்தில் 1436 கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்கள் உள்ளது. இதனை நிரப்ப கோரிக்கையும் எழுந்து வருகிறது. தற்போது கொரோனா தாக்கம் குறைந்ததால் அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகிறது. எனவே விரைவில் குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் போட்டித்தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் தேர்வை எண்ணி காத்துக் கொண்டிருக்கின்றனர். 2 வருடங்களுக்கு பிறகு தேர்வு நடைபெற இருப்பதால் இந்த வருடம் அதிக எண்ணிக்கையில் பணியிடங்கள் நிரப்பப்படலாம் என்று கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!