‘கோதுமை மாவு முதல் குளியல் சோப் வரை’ – தமிழக அரசு வழங்கவுள்ள 14 பொருட்கள்!
தமிழகத்தில் கொரோனா நிவாரணமாக 14 வகை மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஜூன் 15 முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இந்த 14 வகை பொருட்களின் முழு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
நிவாரணப் பொருட்கள்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவி வருவதன் காரணமாக அரசு தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. நோய் பரவலை தடுக்க மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது. தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு ரூபாய் 4000 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி முதல் தவணை ரூ.2000 வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சுற்றுலா செல்ல இ-பாஸ் விண்ணப்பங்கள் அதிகரிப்பு – 90% நிராகரிப்பு!!
மேலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 14 வகை மளிகை பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இன்று முதல் அதற்கான டோக்கன்கள் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சுமார் 2,11,12,798 குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறவுள்ளனர். ஒரு நாளைக்கு 200 குடும்ப அட்டைகளுக்கு ரூ.200 மற்றும் பொருட்கள் இரண்டும் சேர்த்து வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
நிவாரண பொருட்கள் தொகுப்பு: (விலையுடன்)
- கோதுமை மாவு – 1 கிலோ (47.90 )
- உப்பு – 1 கிலோ (8.00)
- சர்க்கரை – 500 கிராம் (21.00)
- உளுந்த பருப்பு – 500 கிராம் (55.02)
- புளி -250 கிராம் – (21.25)
- கடலை பருப்பு – 250 கிராம் (17.75)
- டீ தூள் – 200 கிராம் (40.00)
- கடுகு -100 கிராம் (7.15)
- சீரகம் -100 கிராம் (16.90)
- மஞ்சள் தூள் -100 கிராம் (18.50)
- மிளகாய் தூள் -100 கிராம் (30.00)
- குளியல் சோப்பு – 1 (23.75)
- துணி சோப்பு – 1 (13.09)
- துணி பை -1 (20.00)