மத்திய அரசு ஊழியர்களுக்கு 14% அகவிலைப்படி (DA) உயர்வு – முழு விவரம் இதோ!
மத்திய அரசு, தனது ஊழியர்களின் அகவிலைப்படியை (DA) 14 சதவீதம் உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த உயர்த்தப்பட்ட அகவிலைப்படி பலனை எந்தெந்த பணியாளர்கள் பெறப் போகிறார்கள் என்பது குறித்த விவரங்களை இப்பதிவில் விரிவாக காணலாம்.
DA உயர்வு
நீண்ட நாட்களாக அகவிலைப்படி (DA) உயர்வை எதிர்பார்த்து காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. அதாவது, மத்திய அரசு தனது ஊழியர்களின் அகவிலைப்படியை 14 சதவீதம் உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த DA உயர்வை அனைத்து தரப்பு ஊழியர்களும் பெறப்போவதில்லை. அந்த வகையில் இந்த உயர்த்தப்பட்ட அகவிலைப்படி பலனை எந்தெந்த பணியாளர்கள் பெறப் போகிறார்கள் என்பதை பார்ப்போம். அதாவது, மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் (சிபிஎஸ்இ) ஊழியர்களுக்கு மட்டுமே இந்த DA கிடைக்க இருக்கிறது.
தமிழகத்தில் மீண்டும் அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கு? உண்மை நிலவரம் இதோ!
இந்த அகவிலைப்படி உயர்வுக்குப் பிறகு, ஊழியர்களின் சம்பளம் கணிசமாக உயர்த்தப்பட உள்ளது. அந்த வகையில் மத்திய பொதுத்துறை நிறுவன ஊழியர்களின் சம்பளம் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அரசு ஊழியர்களுக்கு 170 சதவீதம் என்ற விகிதத்தில் DA கிடைத்தது. இது தற்போது 14 சதவீதம் அதிகரித்துள்ளது. இனி ஊழியர்களுக்கு 184 சதவீதம் DA வழங்கப்படும். இதற்கிடையில் கடந்த 18 மாதங்களாக நிலுவையில் உள்ள DA நிலுவைத் தொகை குறித்து பேசம் போது தற்போதைக்கு DA நிலுவைத் தொகை வழங்கும் திட்டம் அரசிடம் இல்லை என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றோருக்கு ஹாப்பி நியூஸ் – இன்று முதல் நகைகள் வழங்கல்!
எனினும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள கூட்டத்தில் இது தொடர்பான சில கலந்துரையாடல் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரையிலான நிலுவைத் தொகை அரசாங்கத்தால் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் இத்தொகை 31% ஆக உயர்த்தப்பட்டது. ஆனால் இத்தொகை இன்னும் அரசு ஊழியர்களின் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. இப்போது JCM தேசிய கவுன்சிலின் செயலாளர் சிவ கோபால் மிஸ்ரா, நிதி அமைச்சகம் மற்றும் செலவினத்துறை அதிகாரிகளுடன் இது குறித்து கலந்தாலோசிப்பார் என்று தகவல்கள் பெறப்பட்டுள்ளது.