மத்திய அரசின் ஊழியர்களுக்கு 14% அகவிலைப்படி உயர்வு – பட்ஜெட் தாக்கலில் அறிவிப்பு!
மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் (சிபிஎஸ்இ) ஊழியர்களுக்கு அகவிலைப்படி 14% உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நேற்றைய பட்ஜெட் தாக்கலில் செய்யப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு பணியாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அகவிலைப்படி உயர்வு:
7வது ஊதியக் குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 11 சதவீதம் உயர்த்தப்பட்டது. CPSE களில், 2007 ஊதிய விகிதத்தில் உள்ளவர்களின் அகவிலைப்படியும் அதிகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஊடக அறிக்கைகளின் படி, ஜூலை 2021 இல், CPSE களின் அகவிலைப்படி 11 சதவீதம் அதிகரித்து 170.5 சதவீதமாக இருந்தது. ஆனால் அதற்கு முன்னதாக 159.9 சதவீதமாக இருந்தது. மத்திய அரசு ஊழியர்களின் DA தற்போது 31% ஆக உள்ள நிலையில், கூடுதலாக 3% அதிகரிக்கப்பட்டு 34% ஆக வழங்கப்பட உள்ளது.
ஐபிஎல் 2022: டாப் வீரர்களை மெகா ஏலத்தில் குறிவைக்கும் ‘தல’ தோனியின் CSK – ரசிகர்கள் உற்சாகம்!
மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் (சிபிஎஸ்இ) ஊழியர்களுக்கு மட்டும் தற்போது DA 14% அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு நேற்று பிப்ரவரி 1ம் தேதி அன்று மத்திய அரசின் பட்ஜெட் தாக்கலின் போது அறிவிக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டு ஊதிய விகிதத்தின் கீழ், CPSE களின் அதிகாரிகள் மற்றும் மத்திய அரசு அல்லாத மேற்பார்வையாளர்கள் இப்போது உயர்த்தப்பட்டுள்ள 14% DA வினால் 184.1 சதவிகிதம் DA பெறுவார்கள். இதுவரை அவர்களுக்கு 170.5 சதவீதம் டிஏ வழங்கப்பட்டு வந்தது.
தினசரி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
இது தவிர, நிலுவையில் உள்ள 18 மாத டிஏ பாக்கிகளைப் பற்றி ஜேசிஎம் தேசிய கவுன்சிலின் ஷிவ் கோபால் மிஸ்ராவின் அறிவிப்பின் படி , நிலை 1 ஊழியர்கள், டிஏ நிலுவைத் தொகை ரூ.11880 முதல் ரூ.37554 வரை பெறுவார்கள். நிலை 13 ஊழியர்கள் அவர்களின் அடிப்படை ஊதியம் ரூ 1,23,100 முதல் ரூ 2,15,900 வரை வழங்கப்படுகிறது. இது தவிர, லெவல்-14க்கு ஒரு ஊழியரின் கையில் டிஏ பாக்கி ரூ.1,44,200 முதல் ரூ.2,18,200 வரை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையின் இந்த அறிவிப்பினால் ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.