Post Office இன் சிறந்த திட்டம் – தினமும் 95 ரூபாய் செலுத்தினால் ரூ.14 லட்சம் ரிட்டன்ஸ்! முழு விபரம் இதோ!
அஞ்சலகத்தில் புதிய சுமங்கல் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காப்பீடு திட்டத்தில் நீங்கள் 14 லட்சம் ரூபாய் வரை திரும்ப பெறலாம். இந்த கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டத்தை பற்றி இப்பதிவில் காண்போம்.
காப்பீடு திட்டம்:
அஞ்சலகங்கள் வங்கிகளை விட அதிக வட்டியை அளிக்கிறது. பெரும்பாலான மக்கள் வங்கிகளுக்கு இணையாக அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அஞ்சலகங்களில் உள்ள சேமிப்பு திட்டங்களில் ஒவ்வொரு திட்டத்திற்கு தனித்தனி விதிமுறைகளும், வட்டி விகிதங்களும் உள்ளது. ஒவ்வொரு நிதி பரிவர்த்தனைக்கும் ரூ.10+ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. சேமிப்பு, முதலீடு ஆகிய திட்டங்களை தொடர்ந்து தற்போது கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
தமிழகத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – முக்கிய தகவல்!
இத்திட்டத்தில் 19 வயதுள்ளவர்கள் முதல் சேரலாம். 2 வகையான முதிர்வு ஆண்டுகள் திட்டத்தில் உள்ளது அதனால் பாலிசியை பொறுத்து அதிகபட்ச வயது மாறுபடுகிறது. அதன்படி 15 ஆண்டு திட்டத்திற்கு வயது வரம்பு 45 ஆகும். 20 வருட திட்டங்களுக்கு வயது வரம்பு 40 ஆகும். இந்த காப்பீடு திட்டத்தில் திட்டத்தில் உங்கள் தொகையை 40% போனஸாகவும், 20% திட்டம் முதிர்ச்சி அடையும் போது பாலிசிதாரர் பெறலாம்.
மேலும் 20 ஆண்டு பாலிசி திட்டத்தில் 7 லட்ச காப்பீடு தொகையில் 25 வயதுடைய ஒரு நபர் சேரும் போது மாதம் ரூ.2853 செலுத்த வேண்டும்.
Jio பயனர்களுக்கு ஷாக் அறிவிப்பு – மூன்று ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் இனி இல்லை!
அப்படியென்றால் ஒரு நாளுக்கு 95 ரூபாய் நீங்கள் சேமிக்க வேண்டும். இந்த தொகையை நீங்கள் தேவைகேற்ப காலாண்டு தொகையாக 8449 ரூபாயும் அரையாண்டு தொகையாக 16715 ரூபாயும் ஆண்டு பிரீமியமாக 32725 ரூபாயும் செலுத்த வேண்டும். இதன் மூலம் பாலிசிதாரர் 20 ஆண்டு முடிவில் 14 லட்சம் ரூபாயை காப்பீடு தொகையை பெறலாம். இதில் காப்பீட்டாளருக்கு எதிர்பாராத மரணம் ஏற்பட்டால் இத்தகைய கொடுப்பனவுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. அதனால் சட்டப்பூர்வ வாரிசுக்கான நியமனதாரருக்கு முழுத் தொகை வழங்கப்படும்.