செப்டம்பர் 26 முதல் 14 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை – மாநில அரசு விடுத்த அறிவிப்பு!
நாடு முழுவதும் மக்களால் தசரா பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படும். அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்தில் தசரா பண்டிகை காரணமாக செப்டம்பர் 26 முதல் 14 நாட்களுக்கு விடுமுறை விடப்பட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை
தெலுங்கானா மாநிலத்தில் ஆண்டுதோறும் தசரா பண்டிகை மக்களால் விமர்சையாக கொண்டாடப்படும். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக அரசு பல கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து தசரா பண்டிகைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றது. இந்த ஆண்டு தசரா பண்டிகையானது செப். 26 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு அக்டோபர் 5 ஆம் தேதி வரை நடைபெறும்.
தசரா பண்டிகை இந்த ஆண்டு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கும் நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை விட இருப்பதாக தெலுங்கானா மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் படி செப். 26 ஆம் தேதி முதல் 14 நாட்களுக்கு மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு தசரா விடுமுறை என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மேலும் மீண்டும் பள்ளிகள் அக்டோபர் 10-ம் தேதி திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக கோயில் திருவிழாக்களில் அரங்கேறும் ஆபாச ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் – உயர்நீதிமன்றம் காட்டம்!
Exams Daily Mobile App Download
அது மட்டுமில்லாமல் தெலுங்கானா மாநிலத்தில் தசரா பண்டிகை அக்டோபர் 5-ம் தேதி நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள கல்வி நாட்காட்டியின் படி, மிஷனரி பள்ளிகளுக்கு டிசம்பர் 22 முதல் 28 வரை கிறிஸ்துமஸ் விடுமுறையும், மிஷனரி அல்லாத பள்ளிகளுக்கு ஜனவரி 13 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை சங்கராந்தி விடுமுறை விட இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்