மாநில அரசு ஊழியர்களுக்கு 14 நாட்கள் கொரோனா விடுமுறை? வெளியான ஷாக் அறிவிப்பு!
ஒடிசா மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியருக்கு 14 நாட்கள் சிறப்பு விடுமுறை என்று அறிவித்தது. இந்த நிலையில் தற்போது இதனை குறைத்துள்ளதாக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சிறப்பு விடுமுறை:
இந்தியாவில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் அதிகரித்து வந்தது. அத்துடன் தென்னாப்பிரிக்காவில் உருவான ஓமைக்ரான் பரவல் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வந்தது. அதனால் இதனை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் குறிப்பாக இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு அமல்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான முக்கிய அறிவிப்பு – கூட்டுறவுத்துறை வெளியீடு!
ஆனால் கொரோனா பரவலின் முதல் மற்றும் இரண்டாம் அலையின் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மத்திய அரசு நேரடியாக அறிவித்தது. தற்போது 3ம் அலையில் மத்திய அரசு நேரடியாக எந்தவொரு ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் அறிவிக்கவில்லை. தொற்று பரவலை பொறுத்து அந்தந்த மாநில அரசுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் சிறப்பு விடுமுறையாக 14 நாட்கள் எடுத்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது
10, 12ம் வகுப்புகளுக்கு ஐசிஎஸ்இ & ஐஎஸ்சி தேர்வு முடிவுகள் மே 7ம் தேதி வெளியீடு – வாரியம் அறிவிப்பு!
இந்த நிலையில் ஒடிசா மாநிலத்தில் பொது நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் குறை தீர்ப்புத் துறை, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு விடுமுறையை மாநில அரசு மாற்றியுள்ளது. இதில் தற்போது கொரோனா சிகிச்சைக்காக வழங்கப்படும் 14 நாட்கள் விடுமுறையை 7 நாட்களாக குறைத்துள்ளது. அத்துடன் 7 நாட்களுக்கு மேல் காய்ச்சல் அறிகுறி ஏதேனும் இருந்தால் அந்த ஊழியர்கள் தங்களது மருத்துவ சான்றிதழை காண்பித்தால் மேலும் விடுமுறையை நீட்டிக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான அறிக்கையை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.