மத்திய அரசு ஊழியர்களுக்கு 13% அகவிலைப்படி (DA) உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) 13 சதவீதம் உயர்த்தப்பட இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் அரசு ஊழியர்களும், ஓய்வூதியதரர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அகவிலைப்படி:
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் அதிகரித்து வரும் விலைவாசிக்கு ஏற்ப அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் வருடந்தோறும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இந்த அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா பரவல் குறைந்த பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் அகவிலைப்படி 11% உயர்த்தப்பட்டு மொத்தம் 28% ஆக அதிகரிக்கப்பட்டது. அதன் பிறகு மீண்டும் 3% அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டு தற்போது 31% ஆக உயர்த்தப்பட்டது.
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 19) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
அதனை தொடர்ந்து 2022ம் ஆண்டு முதல் மேலும் 3% அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெற்று மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 34% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஜனவரி முதல் தேதியிட்டு வழங்கப்படும் என்றும் சுமார் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்தது. இந்த நிலையில் மீண்டும் அரசு ஐந்தாவது ஊதிய கமிஷன் பரிந்துரையின் பேரில் அகவிலைப்படி உயர்த்த உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Infosys நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான அருமையான வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கலாம்..!
ஐந்தாவது ஊதிய கமிஷன் மற்றும் ஆறாவது ஊதிய கமிஷன் கீழ் வரும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் பென்சனர்களுக்கும் மட்டுமே தற்போதைய அகவிலைப்படி உயர்வு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின் படி 196 % இருந்து 203 % ஆக உயர்த்தப்படுகிறது. 2022 ஜனவரி 1ம் தேதி முன் தேதியிட்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்