இந்தியாவில் ஒரே நாளில் 13,615 பேருக்கு கொரோனா பாதிப்பு – அச்சத்தில் பொதுமக்கள்!
நாடு முழுவதும் வேகமெடுத்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக பொதுமக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனாவால் 13,615 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கொரோனா பாதிப்பு:
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த பல மாநில அரசுகள் நடிவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும் பல மாநிலங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு பொது மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் நாடு முழுவதும் 1,99,00,59,536 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
நேற்று ஒரே நாளில் 10,64,038 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் புதிதாக 13,615 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன் மூலம் தினசரி கொரோனா பாதிப்பு 4,36,52,944 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் புதிதாக 20 பேர் இறந்துள்ளனர். அதனால் நாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,25,474 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு 13,265 பேர் குணமடைந்து இருக்கின்றனர். அதனால் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,29,96,427 ஆக உயர்ந்துள்ளது. அதன் படி இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.50% ஆக உயர்ந்துள்ளது. அதே போல கொரோனாவால் உயிரிழந்தோர் விகிதம் 1.20% ஆக குறைந்துள்ளது. அதே போல சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.30% ஆக குறைந்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு 1,31,043 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.