தமிழகத்தில் 1,35,730 புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் நிராகரிப்பு!
தமிழகத்தில் கடந்த மே மாதம் முதல் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் 1,35,730 பேரின் ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரேஷன் கார்டு :
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது முக ஸ்டாலின் ரேஷன் கடைகள் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூபாய் 4,000 மற்றும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். அதன்படி ஆட்சிக்கு வந்தவுடன் இரு தவணைகளாக ரூபாய் 4000 வழங்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். இந்த நிலையில் குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் அதிகரித்துள்ளது.
தங்கம் வாங்க இதுவே சரியான நேரம் – இன்று சவரனுக்கு ரூ.120 குறைவு !
ரேஷன் கார்டு இல்லாதவர்கள் அரசின் 1000 ரூபாய் அறிவிப்பு வந்ததை அடுத்து புதிதாக ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்து வருகின்றனர். கடந்த மே மாதம் முதல் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் ரேஷன் கார்டுகளுக்குக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 15 நாட்களுக்குள் புதிய ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் வரை தமிழகத்தில் மொத்தம் 7,19,895 பேர் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இதில் 4,52,188 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளது. 1,35,730 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது. தென் சென்னையில் மட்டும் கடந்த 3 மாதங்களில் 49920 பேர் ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பித்துள்ளனர். இதில் 17728 விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும் 6073 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் வட சென்னையில், 41431 விண்ணப்பங்களில் 16608 விண்ணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 5312 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.