TNPSC குரூப் 2 தேர்வு, 1338 காலிப்பணியிடங்கள் – போலி சான்றிதழ் சமர்ப்பித்தவர்க்கு 3 ஆண்டுகள் தடை!

1
TNPSC குரூப் 2 தேர்வு, 1338 காலிப்பணியிடங்கள் - போலி சான்றிதழ் சமர்ப்பித்தவர்க்கு 3 ஆண்டுகள் தடை!
TNPSC குரூப் 2 தேர்வு, 1338 காலிப்பணியிடங்கள் - போலி சான்றிதழ் சமர்ப்பித்தவர்க்கு 3 ஆண்டுகள் தடை!
TNPSC குரூப் 2 தேர்வு, 1338 காலிப்பணியிடங்கள் – போலி சான்றிதழ் சமர்ப்பித்தவர்க்கு 3 ஆண்டுகள் தடை!

தமிழகத்தில் பட்டபடிப்பை முடித்ததாக கூறி போலி சான்றிதழை சமர்பித்து குரூப் 2 தேர்வு எழுதிய தேர்வருக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 3 ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதித்து அதிரடி உத்தரவினை பிறப்பித்து உள்ளது.

தேர்வு எழுத தடை :

தமிழகத்தில் அரசு பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகிறது. அந்தந்த துறைகளுக்கு ஏற்ப குரூப் 1, குரூப் 2, குரூப் 4 போன்ற தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ச்சி பெறுபவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி ஆணை வழங்கப்படுகிறது. நேர்காணலில் தேர்ச்சி பெற்றவர்களின் கல்வித்தகுதி சான்றிதழ்கள் உள்ளிட்ட மற்ற ஆவணங்கள் சரிபார்க்கப்படும். கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனா வைரஸ் தொற்று தீவிரமெடுத்து பரவி வருவதால் அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் ஏதும் நடைபெறவில்லை. தற்போது தடுப்பு நடவடிககைகளால் கொரோனா பரவல் குறைந்து வருவதால் மக்கள் இயல்பு நிலை நோக்கி திரும்பி கொண்டிருக்கின்றனர்.

சென்னை: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் – வாகன ஓட்டிகள் கவனத்திற்கு!

இந்த நேரத்தில் அரசு பணிகளுக்கான தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று மக்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். அக்டோபர் மாதம் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்ற தகவல்கள் வெளி வந்துள்ளது. மேலும் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறவள்ளது அதற்கான விண்ணப்ப பதிவு நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் குரூப் 2 தேர்வில் போலி கல்வித்தகுதி சான்றிதழ் சமர்பித்தவரின் மேல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

Best TNPSC Coaching Center – Join Now

கடந்த 2018ம் ஆண்டு அரசுத்துறையில் உள்ள மொத்தம் 1338 குரூப் 2 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்த குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும் என்று தகுதி நிர்ணயிக்கப்பட்டது. இந்த தேர்வை மொத்தம் 6,26,960 பேர் எழுதினர். இதில் 15,000 பேர் அடுத்தக்கட்ட தேர்வுக்கு தேர்வாகினர். இதில் 2667 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. அதில் ஒரு மாணவன் கல்வித்தகுதியில் சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து நடத்திய விசாரணையில் அந்த மாணவன் போலி கல்வி சான்றிதழ்களை சமர்ப்பித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து குரூப் 2 தேர்வில் போலி சான்றிதழ் சமர்ப்பித்த அந்த மாணவன் 3 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தடை விதித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!